Search This Blog

Friday, October 17, 2014

சில வாஸ்து தகவல்கள் .....

1.கோபுர நிழல் விழும் இடத்தில்,கோவிலின் நிழல் விழும் இடத்தில் வீடு கட்ட கூடாது ....
2.பெருமாள் கோவில் பின்புறமும் .....
சிவன் கோவில் ,பிள்ளையார் கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது ..
3.மின்சாரம் தொடக்கம் ,கழிவு நீர் அக்னி முலையில் (தென் கிழக்கு --southeast ) இருப்பது நன்மை ..
4.வீட்டு வாசலில் ராகு கேது பாம்புகளுக்கு அடையலாம் செய்ய
தீய சக்திகள் உள்ளே வராது---(நிலையின் கீழ் பாகத்தில் மஞ்சள் கும்குமம் வைத்து தீபம்,தூபம் செய்வது )
5.வீட்டில் சூரிய வெளிச்சம் விழும்படி ஜன்னல் வைக்க வேண்டும் .
இன்று எல்லா இடத்திலும் முடியவில்லை ..
கூர் மையான இலைகளை உடைய செடிகளை வளர்பதால் இந்த பலனை அடைய முடியும் (கூர்மை யான இலைகள் சூர்ய கதிர்களை இழுக்கும் சக்தி படைத்தவை)
6.அதிக வெளிச்சம் உள்ள வீடுகளில் (சூரிய வெளிச்சம் ) சந்திர கதிர்களை
சமமாக வரவழைக்க வட்ட இலைகளை உடைய செடிகளை வளர்பதால் இந்த பலனை அடைய முடியும்
7.வீட்டில் எதாவுது ஒரு இடத்தில் நீர் குமிழி (fountain )வைப்பதால்
பண புழக்கம் அதிகரிக்கும்
8.வீட்டில் வண்ண மீன்கள் வளர்ப்பது குறிப்பாக கருப்பு நிறத்துடன் 1 மீனும் பல வர்ணமுடன் மற்ற மீன்கள் இருப்பது மிகுந்த நல்ல பலனை தரும் .
9.நம்முடைய வீட்டில் பறவைகள் கண்டிப்பாக வளார்க்க கூடாது
இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் ..
10.சமையல் அறைகளை சுத்தமாக வைத்த பெண்கள் குடும்பத்திற்கு
ஆரோக்கியம் தருகிறார்கள்
படுக்கை அறைகளை சுத்தமாக வைத்த ஆண்கள் பெண்களை ஆரோக்யமாக வைத்து உள்ளார்கள் ..
வாடகை வீட்டில் உள்ளவர்கள்
1.அரசு வேலை உள்ளவர்கள் வடக்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்
குடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும்
2.வியாபாரம் ,தொழில் ,செய்பவர்கள் தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்
குடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும் ..
3.ஆசிரியர்கள் ,மருத்துவர்கள் ,சட்டம் பேசுபவர்கள் ,அறிவியல் துறை சேர்ந்தவர் மேற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்
குடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும் ..
4.மற்றவர்களுக்கு கிழக்கு பார்த்த வீடு சிறந்தது
இவைகள் பொதுவான கருத்துக்கள் ..........

No comments:

Post a Comment