Search This Blog

Wednesday, September 17, 2014

'ஐ' படத்தின் கதை இது தானா? " I " ( ஐ ) - A film by Shankar Story

நம் காதுகளுக்கு எட்டியுள்ள 'ஐ' படத்தின் கதை:-
விக்ரம் ஒரு சாதாரண விவசாயி.
ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மொடல் அழகி.
எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றது. ஆனால் விக்ரம்,
எமியை நெருங்க முடியவில்லை.
எமி ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார்.
அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார்.
எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. இதனால் தானும்
ஒரு மொடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார். தன்னுடைய
கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.
இந்நிலையின் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற
வேண்டும் என்று ஒரு மருந்தைக் கண்டுபிடுக்கின்றார்.
அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்க்கின்றார்.
ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திர
தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினும் மருந்தில் உள்ள
குறைபாடுகளைகண்டறிந்துசரிசெய்கின்றார்.
ஆனால் அதை பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை. அந்த சமயத்தில் தான் விக்ரம்
உபேனை சந்திக்கின்றார்.
விக்ரம் உடம்பில் அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மறுக்கின்றார்.
ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார் விக்ரம்.
ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான
உருவத்திற்கு மாறுகின்றார். எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த
நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவரை கடத்துகின்றார். ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என
கண்டுபிடிக்கின்றார்.
அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாறியுள்ளார். இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூர விலங்குகளாக மோதுகின்றனர்.
பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் மாறினாரா இல்லையா என்பது படக்கதை.
ஷங்கர் இதை மறுத்தாலும் இது தான் கதை என்று படக்குழுவிடம் இருந்து கதை கசிந்துள்ளது.
உண்மையா என்பதைக் காத்திருந்து கண்டுகொள்வோமே..

No comments:

Post a Comment