Search This Blog

Wednesday, August 13, 2014

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை

துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாவைவிட அதிவேகமாக ஆக்சன் எடுக்கும் ஆக்சன் கிங்!!!
தன்னுடைய துப்பாக்கி சத்ததாலே தமிழகத்தை தன்பக்கம் திரும்பி பார்த்த ஒரு தைரியமான, எவருக்கும் பயப்படாத நேர்மையான அதிகாரி,
வீரமும், கோபமும் விளைந்து நிற்கும் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் பிறந்தவர்தான் இந்த வல்லவர்!!! தமிழக காவல்துறையில் அதி உயர் கல்வித் தகுதியுடையவர் இவர்.
எம்.ஏ. (சரித்திரம்) எம்.ஏ. (போலீஸ் நிர்வாகம்) என டபுள் எம்.ஏ.வுடன், பி.ஹெச்டி வரை முடித்த ஒரே தமிழக போலீஸ் அதிகாரி இவர்தான்
தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தபிறகு ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபரர் கலை கல்லூரியில் ப்ரோபோசராக பணியில் சேர்ந்தார், பின் மூன்று வருடம் பணியை தொடர்ந்து 1994ஆம் ஆண்டு எஸ்.ஐ தேர்வுக்கு சென்றார்,
அதன் காரணமாக 1997ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார், பின்னர் 1999 ஆம் ஆண்டு புதுகோட்டை, கீரனூர்-இல் உதவி ஆய்வாளராக பணியை தொடர்ந்தார்,
என்னுடைய முதல் என்கவுண்டர், திருச்சி லால்குடி கோர்ட் மாஜிதிரட் முன்னாடி கூண்டில் இருந்தவரை கழுத்தை அறுத்து கொன்றான் ரவுடியான கோசிஜன், அவன்தான் இவருடைய துப்பாக்கிக்கு கிடைத்த முதல் களை!!!
அப்போதும் அவருக்கு எந்த ஒரு பதட்டமும் இருந்தது இல்லை, அவருடைய பி.பி பரிசோதனை செய்த மருத்துவர் நார்மலாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்தார், இப்பவும் அப்படியேதான் இருக்கிறார், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை ரோல் மாடலாக கொண்டிருப்பார்கள், அதுபோல இவருக்கும் ரோல் மாடல் ஆப்பிசர் உண்டு, அவர்கள் யாரென்றால் "திரிபாதி சார் மற்றும் வால்டர் தேவாரம்" அவர்கள்..... இவர்களை போல தன்னுடைய பாதையை அமைக்கவேண்டும் என்றே லட்சியம் கொண்டவர்,
இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், நெல்லுக்கு பக்கத்தில் களை வளரத்தான் செய்யும், அதை சமையம் பார்த்து புடுங்கி எறியவேண்டும், இல்லையென்றால் அது நெல்லையும் நாசமாக்கி விடும், வயலையும் நாசமாக்கி விடும், அது போலதான் இவருடைய ஆக்சனும், 1000 பேர் சந்தோசமாக இருக்கிறார்கள், அந்த 1000 பேரின் சந்தோசத்தை ஒருவன் கெடுக்கிறான் என்றால் அவனை கொள்வதில் தவறு இல்லை என்பதே இவரது எண்ணம்!!!
ரவுடிசத்தை ஒழிப்பது என்ற விஷயத்தில் முனைப்பான அதிகாரி என்று பெயரெடுத்த டி.எஸ்.பி. வெள்ளத்துரை தன்னுடைய கண்பார்வையிலேயே கண்ணீர் விடவைத்தவர், தமிழகத்தில் ரவுடிகளை வேர் அறுப்பதே இவருடைய லட்சியம்... எவருக்கும் பதறாமல் ஆழ்மனதில் தவறு என்று தெரிந்ததை தைரியமாக தட்டிகேட்கும் தளபதி!!!
மக்கள் பயபடமால் நடமாட ஆதரவாக இருக்கும் கண்ணியமிக்க கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய.திரு.வெள்ளத்துரை அவர்களுடைய பணிசிறக்க, பணி தொடர மனதார வாழ்த்துகிறோம்.... சல்யூட்....
என்றும் உங்களுடன்..........

No comments:

Post a Comment