Search This Blog

Wednesday, August 20, 2014

இளவேனில் மலைவானில் 1976ஆம் ஆண்டு வெளியான "கோமாளிகள்" திரைப்படத்திலே இடம்பெற்ற பாடல்

ஈழத்து பாடல்கள் வரிசையில் கோமாளிகள், ஏமாளிகள், வாடைக் காற்று, அனுராகம், புதிய காற்று படங்களின் பாடல்கள் மறக்கமுடியாதவை.இந்தப் பாடல் 1976ஆம் ஆண்டு வெளியான "கோமாளிகள்" திரைப்படத்திலே இடம்பெற்ற பாடல்...எழதியவர் "சிலையூர்" செலவராஜன்...
இலங்கையின் ஊர்களின் பெயர்களையும் நதிகளின் பெயர்களையும் இணைத்து ஒரு பெண்ணை வர்ணிப்பதுபோல்எழுதியிருந்தார்....
இசையமைத்தவகள் கண்ணன்-நேசம் (தியாகராஜா) இரட்டையர்கள் இந்தப் பாடல் மிகவும் அற்புதமான பாடல். கவிஞர் சில்லையூர் செல்வராஜனும் கமலினி செல்வராஜனும் இக்காட்சியில் தோன்றி நடித்துள்ளார்கள்.
இது எமது அடையாளச் சின்னங்கள். இன்று நவீன தொழில்நுட்பம் இலங்கையில் இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி எத்தனை பாடல்கள் வந்தாலும் இப்பாடலுக்கு நிகராக எந்தப் பாடலும் இல்லை என்றுதான் சொல்லலாம்.எமது நாட்டு இயற்கை வளங்களை
வர்ணித்த அழகியபாடல்
''மலைநாடு பால்ஆறுமொழிகிறது
மகாவலியாக மூதூரில் இப்படி கவிஞரின்
எண்ணம்
இளவேனில் மலைவானில் எதிர்கால மகாராணியே
இனிய காதலை கிள்ளும் பாடலாகவும் எமது மண்ணின் இயற்கை
வளங்களை ரசித்த பாடலாகவும் அமரராகிவிட்ட "சில்லையூர்"அண்ணன் எழுதியபாடல்,படத்தில் அவரே நடித்தும் இருந்தார்.ஜோடியாக நடித்தவர் அவரது துணைவியார் கமலினி.

No comments:

Post a Comment