Search This Blog

Monday, July 7, 2014

அனுமனை விரதம் இருந்து வழிபட உகந்த கிழமை எது?



அனுமனை வழிபடுவதற்கு நாள்- கிழமை எல்லாம் பார்க்கவேண்டிய தேவையில்லை. நேரம் கிடைத்தால், எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். மற்ற அலுவல்களிலிருந்து மனம் முற்றிலும் விடுபட்ட நிலையில் அவனை வழிபடுவது சிறப்பான பலனை அளிக்கும். எந்நேரமும் அவனுடைய நாமாவைச் சொல்லிக்கொண்டு, அலுவல்களுடன் இணைந்து செயல்படுவது, பக்தியை கொச்சைப்படுத்துவதாகும்.
மனம் ஒரு புலனோடு இணையும் வேளையில், அதே அளவோடு அதே நேரம் இன்னொரு புலனோடும் இணையாது. மனம் ஒன்றுதான்; இரண்டு இல்லை. பல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல் துலக்குவதில்லை. உடல் அழுக்கை அகற்றுவதற்காக எப்போதும் குளித்துக்கொண்டே இருப்பதில்லை.
அன்றாட அலுவல்களில் சிக்கித் தவிக்கும் இன்னாளில்... வழிபாட்டுக்கென குறிப்பிட்ட வேளையைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு. தவிர, நீடித்த பணிவிடையைச் செவ்வனே செய்யவும் இயலும். ஆகையால், வியாழக்கிழமை அன்று அனுமனை வழிபடுங்கள்; அவருடைய அருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment