Search This Blog

Tuesday, July 15, 2014

நோயைச் சொல்லும் ஆசை! ஒருவர் விரும்பிச் சாப்பிடும் சுவையைக்கொண்டே அவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறியலாம்


''நம்முடைய உடலில் குறைபாடு ஏற்படும்போது அதைச் சரிப்படுத்திக்கொள்ள நம்முடைய உடல் முயற்சிக்கும். இதற்காக அது சில குறிப்பிட்ட சுவை உள்ள உணவுகளை அதிகம் கேட்கும். ஒருவர் விரும்பிச் சாப்பிடும் சுவையைக்கொண்டே அவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறியலாம்'' என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் தனசேகரன்.
இனிப்பு, துவர்ப்பு - மண்ணீரல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள்
புளிப்பு - கல்லீரல், பித்தப்பை தொடர்பான பிரச்னை. கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் புளிப்பு சுவையுள்ள உணவை அதிகம் சாப்பிடுவர். இந்தக் காலத்தில் தாய், சேய் என இருவருக்கும் சேர்த்து வேலை செய்வதால், தன்னை சரிப்படுத்திக்கொள்ள புளிப்பு சுவையைக் கேட்கிறது.
கசப்பு - இதயம், சிறுகுடல்
காரம்- நுரையீரல், பெருங்குடல்
உப்பு - சிறுநீரகம், சிறுநீர்ப் பை

No comments:

Post a Comment