Search This Blog

Wednesday, May 14, 2014

நடுக்கடலில் கோவில் வழிவிடும் கடல் நீர் கோலியாக் நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்!

நடுக்கடலில் கோவில் வழிவிடும் கடல் நீர்

நடுக் கடல் கோவில்! வழி விடும் ஆழி!
கோலியாக் நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்!

மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, பாண்டவர்கள் வெற்றிமிதப்பில் களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, நிகந்த இறப்பினால் உண்டான தோஷம் கருதி துயரம் அடைந்தனர். தங்களின் ரட்சகனான கிருஷ்ணரிடம் பாவ விமோசனம் தீர வழி கேட்டனர். அவர் ஒரு கரிய நிற தண்டமும், கருப்பு மாடு ஒன்றையும் வரவழைத்து, இக்கருப்பு தண்ட்த்தினை கையிலெடுத்துக் கொண்டு, இம்மாட்டினைப் பின் தொடருங்கள். இவ்விரண்டும், எங்கு வெள்ளை நிறமாக மாறுகின்றதோ, அங்கு, இறைவனை மனம் உருகி வழிபடுங்கள். உங்களின் போரினால் உருவான பாவங்கள் விலக இறைவன் அருள் புரிவான் என்றார். அதன்படியே, அவர்கள் மாட்டினைப் பின்தொடர, கோலியாத்தில் தண்டமும், மாடும் வெள்ளை நிறம் அடைந்த்து. அவ்விட்த்திலே ஒரு குளம் வெட்டி, நீராடி, ஐவரும் இறைவனைக் குறித்து தியானித்தனர். ஐவருக்கும் ஐந்து சிவலிங்கம் ந்ந்தியுடன் சுயம்புவாக எழுந்தருளி, பாவ விமோசனம் அளித்தான் இறைவன். இது புராண வரலாறு.

இத்தகைய சிறப்பு பெற்ற இடம்: குஜராத் மாநிலம் – பாவ் நகரம் – கோலியாக்.
சென்னை செண்ட்ரலில் இருந்து குஜராத்தின் ஆமதாபாத்திற்கு, நவ ஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. அங்கிருந்து, பாவ் நகர். பாவ் நகரில் இருந்து கோலியாக்கிற்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன. (முப்பது கி.மீ)

கோலியாக் நிஷ்கலங்க் மகாதேவ் கோயில் – ஆர்ப்பரிக்கும் ஆக்ரோஷ அலைகள் காணப்படும் கோலியாக் கடலில் ஆலயம் – மகாதேவரின் ஆற்றலை உணரச்செய்யும் சிவாலயம்.
காலை எட்டு முப்பது வரை ஆர்ப்பரிக்கும் அலைகள் சிறிது சிறிதாக உள்வாங்க ஆரம்பிக்கின்றது. கோயிலை நோக்கி, அது வரை பொறுமை காத்திருந்த மக்கள், கோயிலை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். கோலியாக் கடலின் நடுவே அமைந்துள்ள இறைவனை உற்சாகத்துடன் சரண கோஷமெழுப்பி, ஆர்வத்துடன் தரிசிக்க செல்லும் பக்தர்கள், இனிப்புச் சுவை நிறைந்த குளத்தில் குளித்து, தேங்காய் உடைத்து இறைவனை தரிசிக்கின்றனர். பகல் பனிரெண்டு முப்பது நெருங்கும் நேரத்தில் அமைதி காத்த கடல் மறுபடியும், ஆர்ப்பரிக்க சிறிது சிறிதாக கரையை நோக்கி முன்னேற ஆரம்பிக்க பக்தர்களும் கரையை நோக்கி விரைந்து வருகின்றனர். சில நிமிடங்களில், கோயிலின் பட்டொளி வீசும் கல் தூண், கொடி மரம் புள்ளியாகத் தெரிகின்றது.

எத்தனை புயல் சீற்றம் கொண்ட போதிலும், பூகம்ப நிகழ்வு நடந்த போதிலும், கொடி மரமோ, கல் தூணோ பாதிக்கப் படவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கும் செய்தி.
அமாவாசை பவுர்ணமி தின்ங்களில் உள்வாங்கல் கடலில் அதிகம் இருக்கும். இந்த நாட்களில் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. இவ்வாலயத்தினை தரிசிப்பதனை ஒரு பாக்கியமாக கருதி, பாவ விமோசனம் தேடி பெருவாரியான மக்கள் சென்று வருகின்றனர்.
தென்னகத்தில் உள்ள ராமேசுவரம், கேரள மா நிலத்தில் உள்ள குருவாயூர், ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சைலம், குஜராத்தில் கோலியாக்கில் உள்ள நிஷ்கலங்க் மகாதேவ் ஆலயம் ஆகியன பெரும் சிறப்பு பெற்ற ஆலயங்கள்.

மன முருகி, இறைவனை வழிபட்டு, இறைவழியாம் அன்பினது வழியில் செல்பவர்களுக்கு மிகுந்த மாற்றம் நிகழ்த்தும் ஆலயங்களாகும்.
கோலியாக்கில் ஜூலை 27 to ஆகஸ்ட் 24 வரை திருவிழாக்கோலம் தான்.
ஆவணி மாதம் சிவனுக்கு உரிய மாதம். திட்டமிடுங்கள். உங்களின் பொருளாதார நிலையை சரிசெய்து கொண்டு, முடிவெடுங்கள். முடிந்தால் முடியாத்து எதுவுமில்லை. இறை தரிசனத்திற்காக ஏங்குவோருக்கு நிச்சயம் வழி கிடைக்கும்.
ஓம்!…..ஓம்!….ஓம்!……..ஓம் சிவாய நம!…..ஓம் சிவாய நம!….ஓம் சிவாய நம!…ஓம்!…..ஓம்!…..ஓம்!.

-அட்சயாவின் கிருஷ்ணாலயா

No comments:

Post a Comment