Search This Blog

Monday, April 28, 2014

இருத்திய காமம்

பழிபடர் உள்நோய் சிறப்ப
புதுமலர் பூத்து நிற்கும் என் நெஞ்சே கேளாய்
அங்கு ஆற்றியிருக்கும் அடர்சூல் மேகமழைத் தலைவன்
முந்தைய நள்ளென் யாமத்து அவன் வரவில்
கூந்தலில் திளைத்து மகிழ்ந்தனன் காண்
கானகத்தலைவி இவளை
நினைவில் இருத்திய காமம் மறந்து
அவன் உறைதல் கூடுமோ ?
Courtesy : Paintings -Jiaur Rahman

Sakthi Jothi

No comments:

Post a Comment