Search This Blog

Thursday, April 17, 2014

தூரத்திலிருக்கும் நிலவில் நீயும் நானும்

கண்ணில்பட முடியாத தூரத்திலிருந்துகொண்டு உனை நினைத்து உருகிக்கொண்டிருக்கிறேன் உருகியோடும் பனிக்காலத்தின்
குளிர்ந்த நீரோடையின் நடுக்கங்களுடன்
பனிக்கூழ் போர்த்திய மரங்களில் காற்றின் சலசலப்பைக்கூட கேட்கமுடியாத காலத்தில் உன் குரலின் வழியாய்
வெப்பக்காற்றினை நுகர்ந்து சுகம் காண்கிறேன்
தீர்ந்துவிடாதா உன் தனிமை என்றிருக்கும் உனக்கு 
அவ்வப்போது எங்கிருந்தோ கத்தும் பறவையில்
உன் முன் இல்லாதிருக்கும் என்னைக் கண்டுகொள்கிறாய்
அமைதிகூடிய உன் தனித்த பெருவெளியில் நானென்பதின் புனைவில் நீ உயிர்த்திருப்பதை அறிந்து எதுவும் செய்யவியலா
அபலையாக அல்லல் படுகிறேன்
கோடையும் பனியுமாய் மாறும் பருவங்களில் நம் புலம்பல்கள் எவருக்கும் கேட்கா வண்ணம் தீர்க்கப்படாமலேயே மடிகின்றன
துளிர்த்து உயிர்த்து பூக்கும் மரங்களில் நானும் நீயும் அருகருகே
பூத்துப் பழுக்கும் காலங்கள் உண்டாவதற்கு
என் சொற்களில் பிரார்த்தனை செய்கின்றேன்
தூரத்திலிருக்கும் நிலவில் நீயும் நானும்
வெவ்வேறு திசைகளில் அமர்ந்து
புனைந்து ரசிப்பதாய் உன்னை இந்தப் பொழுதில்
திருப்தியுறச் செய்கிறேன்
என்னருகில் மரங்கள் வெயிலில் காய்ந்து
பழுத்த வெடிக்கும் உன் ஞாபகங்களை
உதிர்ப்பதாய் கலங்கி உதிர்கிறேன்
சருகுகளின் சரசரப்புகளினூடே
வெற்று வானத்தின் கீழ் வாழ நிர்பந்திக்கின்ற பொழுதுகளில்.Iyyappa Madhavan
கண்ணில்பட முடியாத தூரத்திலிருந்துகொண்டு உனை நினைத்து உருகிக்கொண்டிருக்கிறேன் உருகியோடும் பனிக்காலத்தின் 
குளிர்ந்த நீரோடையின் நடுக்கங்களுடன்
பனிக்கூழ் போர்த்திய மரங்களில் காற்றின் சலசலப்பைக்கூட கேட்கமுடியாத காலத்தில் உன் குரலின் வழியாய் 
வெப்பக்காற்றினை நுகர்ந்து சுகம் காண்கிறேன்
தீர்ந்துவிடாதா உன் தனிமை என்றிருக்கும் உனக்கு 
அவ்வப்போது எங்கிருந்தோ கத்தும் பறவையில் 
உன் முன் இல்லாதிருக்கும் என்னைக் கண்டுகொள்கிறாய்
அமைதிகூடிய உன் தனித்த பெருவெளியில் நானென்பதின் புனைவில் நீ உயிர்த்திருப்பதை அறிந்து எதுவும் செய்யவியலா 
அபலையாக அல்லல் படுகிறேன்

கோடையும் பனியுமாய் மாறும் பருவங்களில் நம் புலம்பல்கள் எவருக்கும் கேட்கா வண்ணம் தீர்க்கப்படாமலேயே மடிகின்றன
துளிர்த்து உயிர்த்து பூக்கும் மரங்களில் நானும் நீயும் அருகருகே 
பூத்துப் பழுக்கும் காலங்கள் உண்டாவதற்கு 
என் சொற்களில் பிரார்த்தனை செய்கின்றேன்

தூரத்திலிருக்கும் நிலவில் நீயும் நானும் 
வெவ்வேறு திசைகளில் அமர்ந்து 
புனைந்து ரசிப்பதாய் உன்னை இந்தப் பொழுதில் 
திருப்தியுறச் செய்கிறேன்
என்னருகில் மரங்கள் வெயிலில் காய்ந்து 
பழுத்த வெடிக்கும் உன் ஞாபகங்களை
உதிர்ப்பதாய் கலங்கி உதிர்கிறேன் 
சருகுகளின் சரசரப்புகளினூடே
வெற்று வானத்தின் கீழ் வாழ நிர்பந்திக்கின்ற பொழுதுகளில்.

No comments:

Post a Comment