Search This Blog

Tuesday, February 4, 2014

பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம்

பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம் இன்று புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கொள்ளும் வகையில் வரும் முன் காப்போம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு புற்று நோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அவற்றை பற்றிய போதுமான விழிப்புணர்வு இருந்தால் புற்றுநோய் பற்றி நாம டெய்லி பேசறதில்ல நம்மில் யாரேனும் ஒருவரை இழந்திருக்கும் பட்சத்தில் இதை பற்றி பேசுவோம் கமல்ஹாசன் புற்றுநோயால் உயிரிழந்த வாழ்வே மாயம் திரைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம். கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் புற்றுநோய்க்கு எதிராக போராடிய போதும் பேஸ்புக்ல கதற கதற பேசிருக்கிறோம் ,இதை பற்றிய செய்தியை அவ்வப்பொழுது வருத்தத்தோடு பரிமாறிகொள்வதோடு மறந்தே போய்விடுகிறோம் நாம் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் உயிரிழந்தார் என கேள்விப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான அஞ்சலிகளை பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு தானா, அவற்றுடன் புற்றுநோயை மறந்துவிடப்போகிறோமா? புற்றுநோய் என்பது வலியை விட கொடியது, தலைமுடி உதிரும், உடல் பலவீனமடையும், உடலில் புள்ளிகள் உண்டாகும் என பலரும் நினைக்கலாம். உண்மையில் அவர்கள் பயப்படுவதும், கோபப்படுவதும், இந்த பிரச்சினைகளுக்காகவா அல்லது புற்றுநோய் விரைவில் அவர்களின் உயிரை பறிக்க போகிறது என்பதற்காகவா? இங்கு கவனிக்கப்பட வேண்டியது புற்றுநோயுடன் வாழ்பவருக்காக பரிதாப்படுவது அல்ல. அவர்களுக்கு உங்கள் பரிதாபம் தேவையில்லை. மாறாக உங்கள் அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்கள் நோயாளிகளாக முழுவதும் மாறிவிடப்போவதில்லை. அவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்களை முழுமையானதாக திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நீங்கள் அப்படிப்பட்ட ஒருவர் மீது காட்ட நினைக்கும் பரிதாபமும், அனுதாபமும் அவர்களை மேலும் பயத்திற்குள் தள்ளிவிடுகிறது. மாறாக, அவர்களை உற்சாக படுத்துங்கள். அவர்களது பயத்தை தோற்கடியுங்கள். உங்களை போன்ற சக மனிதராக பாருங்கள். உலகின் புற்றுநோய் 47% வீதம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்படுகிறது. 55% வீதமானோர் அங்கு தான் புற்றுநோயால் உயிரிழந்து போகின்றனர். ஆனால் வளரும் நாடுகள் அலட்சியமாக இருந்தால், 2030 இல் புற்றுநோய் 81% வீதம் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது. 2030 இல் வருடத்திற்கு 21.4 மில்லியன் புற்றுநோயாளிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இணங்காணப்படலாம் என எதிர்வு கூறியுள்ளது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம். அல்கஹால், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பருமன் அதிகரித்தல், உடற்பயிற்சி இன்மை இவைகளும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. ஒவ்வொரு வருடமும் உலகில் 22 % வீதமான புற்றுநோய் தாக்கம் புகையிலை மூலமே வருகிறது என்கிறது ஒரு ஆய்வுத்தகவல். புகையிலை உபயோகிப்பதால் நுரையீரல் உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம் சிறுநீர் பை, கணையம் மற்றும் வயிறு மற்றும் வயிறு தொடர்பான இடங்கள், கருப்பை வாய் புற்று என்று இத்தனை வகை புற்றுநோய் உருவாகிறது. புகைபிடிக்கும் பழக்கம் என்பது, அவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருப்போருக்கும் பாதிப்பை தருகிறது. 1. புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. 2...புற்றுநோய் என்பது நன்கு ஆரோக்கியமான, முதிர்ந்த, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மாத்திரமே ஏற்படுகிறது என நினைக்கிறோம். புற்றுநோய் உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் தாக்குகிறது. 3... புற்றுநோய் என்பது ஒரு மரண தண்டனை அல்ல புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள். 4.... புற்றுநோய் என்பது என் விதி என நினைக்கிறோம். போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும். இத்தனை இருந்தாலும் நம்மின் பரிவான பேச்சு ஒன்றே போதும்

No comments:

Post a Comment