Search This Blog

Sunday, January 26, 2014

ரிக்வேதத்தில் வரலாறு

ரிக்வேதம்: பத்து மண்டலங்களையும் 191 சூக்தங்களையும் 1028 பிரிவுகளையும் 10552 பாடல்களையும்; அவற்றில் பல வேண்டுதல்களையும் பாராட்டுக்களையும் துதிப்பாடல்களைச் சுலோகங்களாகக் கொண்ட இனம் பிரிக்கப்படாத தொகுப்புநூல். ரிக்வேதத்திலிருந்தும் அதனைச்சார்ந்த பிராமணங்கள் மற்றும் உபநிஷத்துக்களிலிருந்தும், அனைத்தையும் பயன்படுத்திக் கொண்ட மாபாரதத்தின் இடையே; மகதத்திலிருந்து நாடு கடத்தப்பட்டுத் தெற்கேசென்று மீண்டும் மாபாரத வரலாற்றின் திருப்பத்துக்கு வித்திட்ட நாடுகடத்தப்பட்டோரின் வரலாற்றைக் கொண்ட இராமயணத்திலிருந்தும் முழுமையான வரலாற்றை வெளிக் கொண்டுவர முடியும். இவற்றை முழுமையாக வெளிப்படுத்த நமது பழந்தமிழ்ப் பாடல்களும் காப்பியங்களுமே உதவுகின்றன. சூரிய குலம் சந்திர குலம் என இரு மாறுபட்ட இயல்பும் கலாச்சாரமும் கொண்ட இனங்களுக்கிடையான மோதல்களே அனைத்திலும் இடம்பெற்றுள்ளன. சந்திரகுலத்தினரால் கெடுத்தும் அழித்தும் கொலைசெய்யப்பட்டும் வாழ்விழந்த பெண்களின் வரலாறு பழந்தமிழ்ப் பாடல்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
கிரேக்கத்தில் நடந்த ஒருநிகழ்வைக் காண்பது சிறப்பாக இருக்கும். இதில் இடம்பெறுவோர் அலெக்சாந்தனுக்கு முன்னரும் சமகாலத்திலும் அங்குச்சென்ற; பெயர் மாற்றப்பட்ட பாரதப்புதல்வர்களே. அங்கும் சினிக் (ஆசீவக) தத்துவத்தைத் தோற்றுவித்த ஆண்டிஸ்தெனிஸ், சாக்ரெடீஸ்சின் மாணவர். பிரசித்திபெற்ற டயோஜினிஸ் -ஆண்டிஸ் தெனிசின் மாணவர்-ஒரு பீப்பாய்க்குள்(முதுமக்கள் தாழி?) வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. ஒரு மேலங்கி ஒரு கம்பு மற்றும் ரொட்டி வைத்துக்கொள்ள ஒரு பை ஆகியவை மட்டுமே உடைமைகள்; அதனுள் வைக்கப்பட்டோரின் மகிழ்ச்சியைத் திருடுவது எளிதாக இல்லை. ஒருநாள் பீப்பாய்க்குள் இருந்துகொண்டு சூரியனை ரசித்துக் கொண்டிருந்தபோது அலெக்சாண்டர் அவரைப் பார்க்க வந்தார். தான் அவருக்குச் செய்யவேண்டியது ஏதாவது உள்ளதா? அவருடைய விருப்பம் என்ன? என வினவினார். டயோஜினிஸ்;"ஆம்! ஒதுங்கி நில்; சூரியனை மறைத்துக் கொண்டிருக்கிறாய்" எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் எனக்காண்கிறோம். (இத்தகவல் காலச்சுவடு பதிப்பகத்தாரின் "சோஃபியின் உலகம்" என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது) படிமவடிவிலான இத் தகவலிலிருந்து உணருவது; வசிட்ட அலெக்சாந்தனால் பிடித்துச்செல்லப்பட்ட அறிவாளரில் ஒரு புலவரே இவர் என்பதாகும்.
அறிஞர் போப்-அறிஞர் எல்லிஸ்: "தமிழ்நூல்களைப் பயின்ற வடமொழியாளர் பலரும், அவற்றை ஒத்த பாடல்களையும் செய்யுள்களையும் எழுதியுள்ளனர். தமிழ்க் கவிதைகளில் உள்ள நீதிக் கருத்தைச் சொல்லும் ஒவ்வொரு பாவிற்கும் ஒரு வடமொழிப் பாடலைஅதனோடு நெருக்க முடையதாகக் காட்ட முடியும். ஆனால் இத்தகைய ஒற்றுமை கொண்டுள்ள பாக்கள் பலவற்றுள்; அழகு, இயல் புடன் இயங்குதல், அகத்தூண்டல், சுருக்கம், தெளிவு ஆகிய தன்மைகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்க் கவிதையே மூலம் என்று நிறுவக் காணலாம். "(pOp .xxx iv.)
திரு. டேவிட்சன்: "சமூகப் பொருளதார, கலாச்சாரக் கூறுகளின் மையமாக உள்ள வரலாறு; ஒருகணக்கீட்டு எந்திரமல்ல"
Dr.இராதாகிருஷ்ணன்: "வரலாறு என்பது; சிந்தனையாளர்கள் ஆய்வுசெய்து விட்டுச்சென்ற எண்ணச் சிதறல்களின் வழிநின்று; அறிவு முதிர்ந்த ஒருவர் மனவழியில், முழுமை பெற்று (வரலாறாக) வெளிப்படுகின்றது."
சர் டி.மாதவராவ்: "இந்த உலகத்தில் அரசியல் தீமைகளால் குறைவாகவும், தாங்களே உருவாக்கிக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட (நம்பிக்கை)தீமைகளினால் மிக அதிகமாகவும் துன்பதுக்கு உள்ளாகும் இனம் இந்து சமூகமே ஆகும்.''
வேதங்களில் ஆன்மிகக்கருத்துக்கள் எவையும் இல்லை; வரலாற்றுத் தகவல்களும் பாரதத்தில் தங்களது மேலாண்மையை நிறுவ முயன்ற ஆரியர் மற்றும் பிராமணரின் வேண்டுதல்களும் பிரார்த்தனைகளுமே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இனப்பாகுபாடு வருணப்பாகுபாடு போன்றவை பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையாக உள்ளன.
எகிப்திய கிரேக்க நந்தர்(அலெக்சாந்தர்கள் எத்தனைபேர்? காசிராசனே அலெக்சாந்தன் தானோ? காசிராசனுடனான கிரேக்கரது உறவு எப்படிப்பட்ட தென்பது? அறியப்படவில்லை); சந்திரகுப்தனின் தந்தையைத் தோற்கடித்துப் பஞ்சாபிலிருந்த துவரை=துவாரகையைக் கைப்பற்றிக்கொண்டனர்(துவரை ஆப்கானிஸ்தானில் உள்ளதாகவும் திரு.டி.டி. கோசாம்பி குறிப்பிடுகிறார்); சந்திரகுப்தன் வளர்ந்து (கோசர் படை எனத் தமிழ்ப்பாடல்களில் இடம்பெற்றோர்)படையைத்திரட்டி ஆண்டபோது மகதத்தின் மீதும் அலெக்சாந்தன் போர் தொடுத்தான். சந்திரகுப்தன் வெற்றிபெற்று மீண்டும் துவரையைக் கைப்பற்றினான். கிரேக்கன் உபரிசரவசு(தந்தை=சிரவசுவுக்கு அடுத்த நிலையில் உள்ளவன்)=அலெக்சாந்தன்; அடிமைப் படைத் தளபதி(இவன் ஒரு மீனவனாக=மீன் பாண்டியரின் சின்னமாக்கப்பட்டது; விதுரனின் பிறப்பும் விதுரனின் மகன் பாண்டியன் நெடுஞ்செழியனும் இவனது கால்வழியில் வந்தவர்களே என வேதங்களும் மாபாரதமும் குறிப்பிடுகின்றன) செல்யூக்கஸ் நிகந்தனின் மனைவியைப் புணர்ந்ததால் பிறந்த பெண் ஹெலன்(இவள்மீது மீன்வாடை வீசியதாகவும் கங்கை நதியில் படகு ஓட்டியபோது பராசரனைப் புணர்ந்ததால் இவ்வாசம் நீங்கி வியாசன் பிறந்ததாகவும் குறிப்பிட்டு; ஹெலன் ஒரு கிரேக்க அடிமைப்பெண் என்பதை மறைத்து; சமதக்கினியின் தாய் என்பதையும், விசுவாமித்திரனின் சகோதரி எனவும் மாபாரதம் குறிப்பிட்டுக் குழப்புகிறது) மீது சந்திரகுப்தன் ஆசை கொண்டான். அவளோ தனக்குப் பிறக்கும் புதல்வர்க்கே ஆட்சியுரிமை கொடுக்கவேண்டும் என நிபந்தனை விதித்ததால் மனம்தளர்ந்து திரும்பிவிட்டான். சந்திரகுப்தனின் மகன் கரவேலன்= கிருஷ்ணன்; நீக்கப்பட்டு அவ்விடத்தில் அசோகன் என முசுகுந்தன்=காசியப்பன்= காசி ராசனின் மகன், தேவவிரதனாகப் புகுத்தப்பட்டுச் சந்திரகுப்தனின் ஆசையை நிறை வேற்றுவதாக நடித்துத் தனது ஆட்சியுரிமையை விட்டுக்கொடுத்து ஹெலனை மணம் முடித்து பீஷ்மனானான் எனவும் மாபாரதம் குழப்புகிறது. பீஷ்மனை முசுகுந்தனாகப் பல புராணங்கள்-குறிப்பாக கந்தனின் தந்தை என ஸ்ரீமஹா கந்த புராணம்- குறிப்பிடுகின்றன. ரிக்வேதம் பீஷ்மனை இந்திரனாகவும் தமிழரான தஸ்யூக்களுக்கு எதிரானவனாகவும் குறிப்பிடுகிறது;
ரிக்வேதமண்டலம் 7;சூக்9:(ஆரியபிரகத்தன் படையினருடன் பல்லவராகத் தொண்டைநாட்டில் குடியமர்த்தப்பட்டதை) " (முசுகுந்த) இந்திரன் சோம்பிப்பேசித்திரியும் எதிரிகளை எண்ணற்ற வழித்தோன்றல்களுடன் (கரிகால்சோழன்)சுதாசனுக்கு அடிமையாக்கினான்"
10.49: இந்திரன் "நான் மனித நலனுக்காக வச்ராயுதத்தைப் பயன்படுத்தி அழித்தேன், காத்தற்பணி மேற்கொண்டு கூபா(?)வைப்பேணி, சுசுனா(?)வை அழிக்க வச்ராயுதம் ஏந்தினேன். தஸ்யூக்கள் 'ஆரியன்' என்னும் பட்டத்தை இழக்கச்செய்தேன்"
10-49.3: "தஸ்யுக்களிடமிருந்து ஆரியர் எனும் உயரினப்பெயரைப் பறித்துவிட்டேன்" என முசுகுந்தனின் கூற்றுக்கள் இடம்பெற்றுள்ளன.
கரவேலன்=கண்ணனும் தேவவிரதன்=பீஷ்மனும் எட்டாவதாகப் பிறந்தவர்கள் என அறிகிறோம். சதபத பிராமணம்(மேற்கோள்-ஆன்டன்பர்கின் நூல் 'புத்தர் வாழ்க்கை' பக் 404): பாஞ்சால மன்னன் சோஹன்(சோழன்) சத்திரகன்[சோழன் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவுக்கு வேங்கடமலைக் காட்டில் விசுவாமித்திரர்) யாகம் செய்த போது தௌர்வசர்கள்(துர் என, பெயருக்கு முன்னர் ஒட்டாகக்கொண்டர் வாசர்கள்(அனேகமாக மீன் வாடைகொண்டவர்கள்); விசுவாமித்திரனின் சோழ சூரிய குலத்தருக்கு எதிரிகள்]ஆறாயிரம்பேர் கவசமணிந்து எழுந்து(எதிராக)நின்றனர்". எனக் குறிப்பிடுகிறது. ரிக்வேதம் 3-53.24: "விசுவாமித்திர குலத்தரான பாரதர்க்கும், வசிட்ட குலத்தரான திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனக்குறிப்பிடுகிறது. ரிக்வேதம்: 8.96.13-14: கிருஷ்ணன் ஒர் அசுரன்; அம்சுமதி ஆற்றங்கரையில் இந்திர(முசுகுந்த=பீஷ்ம)னோடு போரிட்டான்"(ஒடிஸ்ஸாவின் கலிங்கத்தில் அசோக=இந்திர முசுகுந்த பீஷ்மனுடன் போரிட்டதையே காலிங்கனோடு கரவேல்=கண்ணன் போரிட்டதாகக் காணவேண்டும்)
இந்தியாமீது போரிட்ட அலெக்சாந்தன் வெற்றிகொண்ட பல குடியரசுகளும் சுதந்திரமான தற்சார்புடைய சுயாட்சியுரிமை படைத்தவை என வரலாற்றாளர்கள் விவரித்துள்ளனர். இக்குடியரசுகளுள் சோடாரி(சோழர்) இன மக்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் விந்தியமலைக்குத் தெற்கே வாழ்ந்ததாக பதஞ்சலியின் மாபாடியத்தில் 1,2,3 லும்; மாபாரதம் இயல் XXXII சபாபருவத்திலும் விஷ்ணுபுராணத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும் இதர சில இனங்களுக்கிடையே குறிப்பிடப்பட்டுள்ளனர்; தஸ்யுக்களாகத் தமிழரை 78 இடங்களில் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. கிரேக்கர்கள் பல்வேறு வர்க்கத்தினரை உள்ளடக்கிய ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என ஒப்பற்ற ஞானி பிளேட்டோ விரும்பியபோதிலும் அங்கு நிறுவுவதைக் கிரேக்கர்கள் விரும்பவில்லை; அதனை நிறுவிஸ் சோதனையிட இந்தியா தேர்வுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. அன்றைய கிரேக்கத்தில் மக்களிடையே மூன்று வகுப்புக்கள் மட்டுமே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நான்காவதாக்ச் சூத்திரர் என ஒரு இனத்தைப் புகுத்தும் முயற்சி இந்தியாவில் கிரேக்கராலேயே ரிக்வேத காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை; மீண்டும் பிற்காலப் பாண்டியருக்காதரவாக வந்துசேர்ந்த கிரேக்கராலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
வரலாற்றில் பீஷ்மன் என அசோகனைப் புகுத்தியதும் கற்பனையே; அசோகன் என்பதாக ஒருவன் இருந்ததில்லை; அவனால் வெட்டப்பட்டதாகக் கருதப்படும் கல்வெட்ட்டுக்களும் வரலாற்றை மாற்றியமைக்கவும் பௌத்தமதம் என்பதாக ஒன்று அசோகனது காலத்துக்கு முன்னரே தோன்றியது என்பதை நிறுவவும் சிங்கள=நகுஷ=உஷனர்கள்(எகிப்திய கிரேக்க அடிமைகள்) மஹாவமிசம் மற்றும் புத்தசாதகக் கதைகளில் எழுதிவைத்தனர்.
வால்மீகி இராமாயணம்-சுந்தரகாண்டம்-அத்யாயம்-4-சருக்கம்:14 முதல்: (பாண்டிய இராவணனிடம் ஒப்படைக்கப்பட்ட சோழநாட்டை ஆளும் தகுதிக்கான இந்திர ஆரத்தை)சீதையைத் தேடிச்சென்ற அஞ்சனஏயன்=அஞ்சனையின் மகன்; புத்தனின் ஆலயம் போன்ற மேடையில், ஒற்றை ஆடையுடன்(உரிமையாளன்/ கணவன் பாதுகாப்பில்லாமல்) சீதையைக்கண்டு; இராமன் தன்னிடம் கூறியபடி நகைகளெல்லாம் மரக்கிளைகளில் உள்ளதையும் சீதையையும் கண்டு உறுதிசெய்தான். இந்த (சீதை)பொன்ஆரமே இராமனால் கைப்பற்றப்பட்டு மீண்டும் அணிந்து ஆட்சிசெய்யப்பட இருந்தபோது பொதுமக்களில் ஒருவன்: "சீதை(ஆரம்) பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இராவணனிடம் இருந்துள்ளதால் அவன் அதைத் தொடாமலா இருந்திருப்பான்; எனவே சீதை(ஆரம்) கறைபடிந்தது" என ஐயம் எழுப்பியதால் பொன் ஆரமான சீதை மீண்டும் அக்கினிப்பிரவேஷம் செய்து புதுப்பிக்கப்பட்டது என்பதைக் காணத்தவறிவிட்டோம்.
புத்தனுக்குப் பிறகே இயற்றப்பட்ட இராமாயணத்தில் குழப்பமிருப்பதுவியப்பல்ல!?(புத்தன் யார்?)புத்தனின் வாரிசு(செவ்வேல்=செங்குட்டுவன்) அநந்தனுடன் முரணிய பௌத்த= சிங்களர்; புத்தனின் காலத்தை மாற்றி; '500 ஆண்டுகளுக்குத் தனது சிலையை வைத்து வணங்கக்கூடாது' எனப் புத்தன் கட்டளையிட்டதாக; ம(க)ாவம்சத்தில் எழுதிவைத்து; அங்கிருந்த தமிழரை அடக்கினர்; ஆயினும் மக்களோ தங்களது வழிபாட்டு நெறிகளை விடுவதாக இல்லை; புத்தனின் காலடிச்சுவட்டை(பாதுகா) வணங்குவதாக மாற்றிக்கொண்டனர். இதனையும் பிராமணர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்; ஆயினும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் பாதுகா என்பதை யதுகா என மாற்றிவிட்டனர்.
பீஷ்மனின் அறிமுகத்தின்போதே கங்கைநதியை (கங்கைப்பகுதிப் பெண் தனது காதலன் திலீபனுடன்=தென்னகவேந்தனுடன் சேர்வதை) அணைபோட்டுத் தடுத்ததாகக் காண்கிறோம். மேலும் சந்திரகுப்தனுக்கும் ஹெலனுக்கும் பிறந்த பிந்துசாரன்=சித்ராங்கதன், பிம்பிசாரன்=விச்சித்ரவீர்யன் ஆகியோருக்கு முசுகுந்த பீஷ்மன்; தனது தந்தை காசிராசனின் பெண்களான அம்பா அம்பிகா அம்பாலிகா என மூவரையும் மணம் முடிக்க முயன்றதையும் காண்கிறோம்.
இந்நிலையில் அலெக்சாந்தன்= வசிட்டனோ; சந்திரகுப்தனின் பிற வாரிசுகளால் உருவாக்கப்பட்ட நாடுகளின் மீதும்; குறிப்பாகக் கரவேலன் கண்ணனுக்காக விசுவாமித்திரன் உருவாக்கிய வேங்கடக் காட்டுப்பதியில் திருப்பதியில்=த்ரௌபதியிலும், சோழன் சேத்சென்னி உருவாக்கிய சோழநாட்டிலும் தங்களது உரிமைகளை நிலைநாட்ட முயன்றதைக் கரவேலன்= கண்ணன்=திரிசங்கு என்னும் சத்திய விரதனின் வரலாற்றிலும் (ஹரிவம்சம்-முய்ர் மேற்கோள் தொகுதி 1 பக்கம் 377-378; இராமாயணம் மேற்கோள் பக் 401-404) விசுவா மித்திரனுடனான வசிட்டனின் மோதல்களிலும் சந்திரகுப்தனின் தங்கையை மணந்த சோழன் இளஞ்சேத்சென்னியின் வரலாற்றிலும் காண்கிறோம். சோழநாட்டில் விசுவாமித்திரனுக்கு எதிராகத் தனது மகன் சமதக்கினியைப் புரோகிதனாக்கினான்; சமதக்கினியை வசிட்டன் எனவும் வசிட்டனுக்கு நூறு புதல்வர்கள் எனவும் மாபாரதக் கிளைக்கதைகளில் காட்டி; கண்ணில்லாத திருதராட்சனானகவும் மாற்றி வரலாற்றை மறைக்க முயன்றதை மாபாரதத்தில் காண்கிறோம்.
ஹெலனுடன் சந்திரகுப்தன் கொண்ட புணர்ப்பினாலேயே நமது நாட்டுக்கு ஒழுங்கான வரலாறு இல்லை; அந்நியரிடம் நாடுகளை இழந்தோம்; இளஞ்சேத்சென்னியின் மகன் கரிகால் மற்றும் முசுகுந்தனுக்கும் கரிகால் சோழனின் தங்கைக்கும் பிறந்த செங்குட்டுவனின் காலத்தில் மீண்டும் போரிட்டுப் பெற்றோம்; ஆயினும் நமது முன்னோன் சந்திரகுப்தன் ஹெலனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறமுடியாமல்; வாய்மையால் கட்டுண்டு வரலாற்றை இழந்து ஒடுக்கப்பட்டோராக வரலாற்றை அறியாமலேயே மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவர்களது வரலாறு சந்தனு சத்தியவதி எனப் புராணவடிவில் இடம்பெற்றுள்ளது. அந்நியரின் மேலாதிக்கத்தால் நாடு பல மாற்றங்களுக்கு உள்ளானதைக் கலித்தொகை-பாலைக்கலிப் பாடல் 25:
"வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்;
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா;
கைபுனை அரக்குஇல்லைக் கதல்எரி சூழ்ந்தாங்கு
கலிதிகழ் கடாஅத்த கடும்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன்
உள்ளத்துக் கிளைகளொடு உயப்போகு வான்போல
.. .. சிறப்புச்செய் துழைய்யராப் புகழ்பேத்தி மற்றவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் ..." என; அந்நியப்பெண் ஹெலனுடன் சந்திரகுப்தன் கொண்ட புணர்ப்பினால்; மகன் கரவேலன்=கண்ணன்= திரிசங்கு= சத்திய விரதன் உரிமையை இழந்து தவித்தபோது விசுவாமித்திரனால் ஆதரிக்கப்பட்டதையும் இதனால் விசுவாமித்திரனும் தண்டிக்கப் பட்டதையும் மாபாரதமே எடுத்துரைக்கிறது.. 'கிருஷ்ணனுடைய மக்கள் சராசந்தனால் மதுராவிலிருந்து விரட்டப்பட்ட போது மேற்குப்பக்கமாக நகர்ந்து துவாரகையில் குடியேறினர்' என நச்சினார்க்கினியர், தொல்காப்பிய உரையில் மேற் கோள்காட்டியுள்ளார். எங்கிருந்து பெறப்பட்டனவோ?; அவற்றுள் போரில் ஈடுபட்ட பரசுராமனைக் காண்போம்:
"மறங்கெழு வேந்தன்; குறங்கறுத் திட்டபின்
அருமறை யாசா னொருமகன் வெகுண்டு
பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமொ
டிரவூ ரறியாது துவரை வேந்தொடு
மாதுலன் றன்னை வாயிலி னிறீ இக்
காவல் பூட்டி யூர்ப்புறக் காவயின்
ஐவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக்
கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்
றொக்குடம் பிறீ இத் துறக்க மெய்திய
தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனென
துஞ்சிடத் தெழீ இக் குஞ்சி பற்றி
வடாஅது பாஞ்சால னொடுமுதற் புதல்வனைக்
கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக்
கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற்
றம்பியர் மூவரு மைம்பால் மருகரு
முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய
வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை, யால் வினைக்
கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத்
தன்முதற் றாதையொடு கோன்முத லமரர்
வியந்தனர் நயந்து; விசும்பின்
இயன்றதா யுலகமு மறிந்தா லதுவே"
-பாஞ்சாலம்-திரௌபதி-திருப்பதி- பாஞ்சாலி; குறங்கறுத்தல்=தொடைபிளத்தல்-பிராமணருடன் தொடையிற் பிறந்த வைசியர் தொடர்பை நீக்குதல்; மறங்கெழு வேந்தன்=தருமன்=கரிகால்; சோழரின் துணையுடன் சமதக்கினியுடனான வைசியரின் தொடர்பைத் துண்டித்ததால் சமதக்கினியின் மகன் பரசுராம துர்யோதனன் வெகுண்டு; தனது தந்தையின் கொலைக்கும் காரணமான கண்ணனின் மகன் பரீச்சித்துவை வேள்வியாகங்கள் செய்து வேந்தனாகாமல் தடுத்தான். இதனை எதிர்த்த அனைவரும் நூற்றுவருக்கெதிராகத் திரண்டனர்; மேலும் கதை தொடர்கிறது; ஆயினும் இவ்வரலாற்றைத் தெளிவாகக் காட்டும் பாடல்கள் எங்குமே இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டதால் விளக்கம் காண்பதி எளிதாக இல்லை. தலையற வெறிதல்= தலையிற் பிறந்த அறிவாளர், அந்தணருடனான வசிட்ட-சமதக்கினி கூட்டத்தாரின் தொடர்பை நீக்குதல்; மாபாரதத்தில்; சரசுவதிநதி-அறிவாளர்படை; சிந்துப் பகுதியை நீங்கி; மகதத்துக்கும் தென்னகத்துக்கும் சென்றதை(சதபத பிராமணம்-1-4-10 குறிப்பிடுகிறது); மகதம் சென்ற இப்படையை முசுகுந்தனிடம் பரசுராமன்=துர்யோதனன் பெற்றான். மேலும் இப்பாடல் சந்திரகுப்தனால் அல்லலுற்ற, மாபாரதத்தில் இடம்பெறும் ஐவரும் சகோதரர்கள் அல்ல; ஐந்து திணை நிலங்களின் தலைவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் புறநாநூறு- 2:
"மண்தினிந்த நிலனும் நிலம்ஏந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் .. .
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்நாட்டுப் பொருந
...அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
. .. திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலைஇய அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே" என மாபாரதப் போர் குறித்த தகவல்களைக் காண்கிறோம்.
அகத்தியனும் வேலிரும்
புறநாநூறு 201, 202ல் வரலாற்றைக் கபிலனும் காட்டுகிறான்:
".. நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை ஆண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை * வந்த
வேலிருள் வேலே விறற்போர் அண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே *
ஆண்கடன் உடைமையின் பாண்கடண் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் .. .. .
பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடலருங் குரைய நாடுகிழ வோயே"
என: அகத்தியனின் 'தடவினுள்' 49வது வழிமுறைத் தமிழன் கோவேலைக் காண்கிறான். (பாட்டன்-பெயரன்)வழிமுறைக்கும், (தந்தை-மகன்)தலைமுறைக்கும் உரைகாரர்கள் வேறுபாடறியவில்லை. [*49x60+கிமு161+கிபி 2013=5114 கலியுகத்தின் துவக்கம்}சந்திரகுப்தனுக்குப்பின்; விசுவாமித்திரன், கரவேலன், கரிகால் என அகத்தியர் ஆயினர். பெருஞ்சேரலாதனும் கோ வேலும்; ஒலியற்கண்ணிப் புலிகடி மா அல்-கரிகாலால் அடக்கப்பட்டோராவர். வேலிரின் 5000ஆண்டுப் பழமையையும், உலகில் எங்கே உள்ளது என அறிய வியலாத துவரை நாட்டை ஆண்டதாகவும் காண்கிறோம். ஆங்கிலத்தில்; "Life Time" =பாட்டன் பெயரன் என்னும் மூன்றுதலைமுறையைக் கொண்டது ஒரு வழிமுறை; பஞ்சாங்க ஆண்டு வட்டமான 60 ஆண்டுகளில் சந்திரகுப்தன் காலம்வரை 2880 ஆண்டுகள்; வரலாறற்றுக் கழிந்துள்ளன. பின்னரே சந்திரகுப்தன் மணந்த கிரேக்கப்பெண் ஹெலனால் தொல்லை துவங்கியது. ஒட்டக் கூத்தரின், தக்கயாகப் பரணியில் இந்திரனின் மக்கள் நாற்பத் தொன்பதின்மர் எனவும்; களவியல் உரைப்பாயிரம் 'சங்கம் இரீ இனார் முடத்திருமாரன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப' எனவும் குறிப்பிடுகின்றன. 5114 ஆண்டுகளை உள்ளடக்கிய வரலாற்றை வெளிக்கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல என்பதை மறந்துவிடக்கூடாதல்லவா? முதுகுடி- தொல் குடித் தமிழரின் வரலாறும் மொழியும் நிச்சயமாக 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதை நமக்குக் கிடைத்துள்ள பழமையான இலக்கிய இலக்கணங்களின் பொருள்களைத் தெளிவாக உணர முடியாத போதிலும்; செழுமையைக் காண்போரால் உணரமுடியும். புறநாநூறு 201ம் பாடலின் இறுதி நான்கு அடிகளுக்குச் சரியான விளக்கம் இல்லை. பாரிமகளைப் பார்ப்பார்ப்படுத்தி; மண முடிக்கக் வேண்ட, கோவேல் மறுத்துவிட்டபின்; புறம் 202ல் கபிலன்:
"..இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோ(டு)டிபல அடுக்கிய, பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேள்இனி:
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள்; கழாஅத் தலையை/ தானையை
இகழ்ந்ததன் பயனே: இயல்தேர் அண்ணல்
எவ்வி; தொல்குடிப் படீஇயர்"
என்கிறான். "புலிகடி மாஅல்" யார்?; "எவ்வி; தொல்குடிப் படீஇயர்" என்பது என்ன?; குறுந்தொகை 19: "சூரியனின் மறைவால் வாடும் பூக்களை(பெண்களை)ப்போன்று; எவ்வி(மயன்=விசுவகர்மன்) எனும் மன்னனை இழந்த யாழ்ப்பான நாட்டார் வருந்தும் நிலையொப்ப உதவுவாரின்றி நானும் வாடுகிறேன்" எனப் பாவை குறிப்பிடுகிறாள்.எவ்வி குறித்த பாடல்கள் மேலும் பல உள்ளன. விசுவகர்மனை ரிக்வேதம் இலங்கையின் அதிபனாகவும் சந்திரகுப்தனைப் பலிப்பொருளாக=புருஷனாகப் பிணித்தபோது பிற மூன்று பகுதிகளில் ஒன்றான தென்திசைக் காப்பாளருள் ஒருவனாகக் குறிப்பிடுகிறது; இதனை மாபாரதமும் உறுதிப்படுத்துகிறது. 'இரு பால் பெயரிய உருகெழு மூதூர்'; எது? ஏன் இரண்டுபட்டது?; திருமா, பிரகத் மற்றும் முசுகுந்தனுக்குப் பிளவுபட்ட தென்னகமும் தொண்டைநாடுமா, தென்னகமும் மகதமுமா? விந்தியமலையை எல்லையாகக்கொண்ட இரு நாடுகளா? இந்தியரும் எகிப்தியருமா? தொல்குடி: பண்டவர் பண்டையர் பழங்குடி முதுகுடி திரையர் தொண்டையர் எனப்பலவாறாக அறிவாளர் வேலிரைப் பார்ப்பனரும் பிராமணரும் இழிவுபடுத்தியதை உணர்த்தும் பாடல்கள் பலவற்றைக் காண்கிறோம். புறம் 69ல் கிள்ளி-கரிகால்வளவனை: "கழாஅத் தானையன்" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம். இலங்கையை வென்று சீதை=ஆரத்தைக்கைப்பற்றிய ராமன் அங்கிருந்து சிறைப்பிடித்துவந்த சிங்களரைக்கொண்டு இன்றைய காவிரிநதியைஸ் சிவசமுத்திரத்திலிருந்து திசைமாற்றி ஒகெனக்கல்லுக்குக் கொண்டுவந்து பாறைகளை உடைத்து வழியமைத்து மேட்டூர் வழியாகத் தனது கடற்கரை நகரமான காவிரிப்பூம்பட்டனத்துக்குக் கொண்டுசென்றான் என்பதை எவரும் விரிவாக வெளிப்படுத்தவில்லை; ஆயினும் "க" மண்டலத்திலிருந்து காவிரியை விடுவித்துத் தென்னகத்துக்குக் கொண்டுவந்த கவேரன் என வரலாற்றில் இடம்பெற்றுள்ளான். "நீடுநிலை அரையத்தினர் கேடுறப்போவதாக" எச்சரிப்பது இமைய மலைச்சாரல் சார்ந்தோரை எச்சரிப்பதாகும். இவையனைத்தும் நுணுகி ஆய்வுகொள்ளத்தக்கன. நற்றிணை 281:
"வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம்பல் யாணர்
விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப" என்னும் அடிகளும் நோக்கத்தக்கன. பாடல் 345:
"களிறு அனைப்பக் கலங்கின காஅ
தேரோடத் துகள் கெழுமின தெருவு
மா மறு/வழ ங்கலின் மயக்குற்றன வழி
கலங் கழாஅலின் துறை கலக்குற்றன
தெறல் மறவர் இறை கூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் காணிக்
கருங்கண் கொண்ட நெடும்கண் வெம்முலை
மையில் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே இவள்தன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகழ் வேண்டி
நிரல்அல் லோர்க்குத் தரல் இல்எனக்
கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்னம் மறவர்த் தாயினும்/பிறவாததாயினும் அன்னோ
என்னா வதுகொல் தானே
பன்ன/னெல் வேலிஇப் பணைநல் லூரே." என முசுகுந்தனால் கெடுத்து நாசப்படுத்தப்பட்ட பாவை; கரிகால்சோழனின் தங்கையின் துயரையும் அதன் விளைவுகளையும், போரையும் வரலாற்றுத் தகவல்களுடன் கபிலன் குறிப்பிடும் "கழாஅத் தலையர்" இடம்பெறுவதையும் காண்கிறோம்.
(சந்திரகுப்தனுக்கும் ஆசைமனைவி ஹெலனுக்கும் பிறந்த பிம்பிசாரனுக்கு மணம் செய்யப்பட்ட இருபெண்களுக்குக் குழந்தை பிறக்கும் முன்னரே சந்திரகுப்த) மௌரியரின் கடைசி வாரிசை (பிம்பிசாரனை) புஷ்யமித்திர சுங்கன் கொலைசெய்தான் என; திரு. ஹரப்பிரசாத்சாஸ்திரியின் "பௌத்த ஆய்வுகள்" நூல் குறிப்பிடுகிறது. சத்தியவதி=ஹெலனுக்கும் சந்தனு=சந்திரகுப்தனுக்கும் பிறந்த இரு புதல்வர்களுள் சித்ராங்கதன்=பிந்துசாரன் இளம் வயதிலேயே கொலை செய்யப்பட்டான்; மற்றொருவன் பிம்பிசாரன்=விச்சித்ரவீர்யனுக்கு மணமுடிக்கப்பட்ட அம்பிகாவும் அம்பாலிகாவும் குழந்தை பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை; ஆயினும் மாபாரதம் இப்பெண்கள் சந்திரகுப்தனின் ஆசைமனைவிக்குத் திருமணத்துக்கு முன்னரே பராசரனுடன் கூடியதால் பிறந்த வியாசனுடன் கூடி திருதராட்சதனும் பாண்டுவும் பிறந்ததாகவும்; மேலும் அம்பிகாவின் பணிப்பெண்ணுடன் வியாசன் கூடியதால் விதுரன் பிறந்ததாகவும் குழப்புகிறது. திருதராட்சசனும் பாண்டுவும் கற்பணைப் பாத்திரங்களே; விதுரன் மட்டுமே வரலாற்றில் இடம்பெற்றவனாகத் தெரிகிறான். அம்பா; முன்னரே சால்வன்மீது காதல் கொண்டதால் பீஷ்மனால் விடுவிக்கப் பட்டும் சால்வன் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை; பீஷ்மனும் ஏற்க மறுத்துவிட்டதால் அம்பா சிகண்டியாக மாறி பீஷ்மனைக் கொலைசெய்யப் போவதாகச் சபதம் செய்ததாகவும் மாபாரதம் குறிப்பிடுகிறது.
சதபதபிராமணத்தில் அசுவமேதயாகத்தில் அம்பா, அம்பிகா, அம்பாலிகா மூவரும் இடம் பெறுகின்றனர்; அதர்வ வேதத்தில் 4.37.7ல் சிகண்டி என்னும் ஒரு கந்தர்வன் இடம்பெறும் கதை; ஊர்வசியின் கதைக்குத் தொடர்பு கொண்டதாக திரு.டி.டி.கோசாம்பி குறிப்பிடுகிறார். மேலும் அவரது "மாயையும் எதார்த்தமும்" நூலில்; ரிக்வேதத்தின் சிறு நூலான அனுக்கிரஹமணி என்னும் நூல் குறிப்பிடுவதாக 'புத்த இலக்கியங்களில் புத்தரின் மறு அவதாரமே பிராமணரான நாரதர்' எனவும்; 'தேவதைகளான நாரதரும் அவரது சகோதர் பப்பதாவும் உள்ளனர்' எனவும்; 'ரிக்வேதம்: 9.104 பாடலை; இவர்கள் இயற்றியதாகக் குறிப்பிடுவதாகவும்; மேலும் இரு சிகண்டிகள், அப்சரசுகள் கசியப்பனின் புதல்வியர்கள் எனக் குறிப்பிடுவதாகவும்' குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் காசியப்பனே 'பூர்ண காசியப்பன் என்னும் காசிராசன், முசுகுந்தன் என்னும் காசியப்பனின் தந்தை'. ஆகவே காசிராசனின் புதல்வியர் அம்பா அம்பிகா அம்பாலிகா மூவரும் சிகண்டியராக மாறினர் என்பது உறுதிப்படுகிறது. இதனை மாபாரதம் முற்றிலுமாக மறைத்துக் குழப்பியுள்ளதைக் காணத்தவறிவிட்டோம்.
ரிக்வேதத்தில் வரலாற்றைக் காணும் முன்னர் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
ஊர்வசி, அப்சரசு, ரம்பா, மேனகா, திலோத்தமை, இந்திராணி போன்றவை நாடுகளையும்; சில சமயங்களில் அந்நாட்டுக்குரிய தாய்வழிச் சமுதாயப் பெண்ணையும் குறிக்கும். நீர்த்தேவதைகளாக இடம் பெறுவோர் இமையப்பகுதி நீங்கலாக, "நாமநீர்வேலி" எனப் பழந்தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடும் முக்கடல் சூழ்ந்த இந்தியப்பகுதியில் பிறந்த பெண்ணையும் நாட்டையும் குறிக்கும்; ஆடை என்பது பாதுகாப்பையும், ஒற்றையாடை என்பது பாதுகாப்பற்ற அல்லது கணவனை இழந்த அல்லது நீக்கிய பெண்ணையும் நாட்டையும் குறிக்கும்; தன்னிச்சையாக எவரும் எந்தநாட்டையும் எவருக்கும் ஒப்படைத்துவிட முடியாது. சுயம்வரம் என்பதாக ஒன்றை நடத்திப் பலபோட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அந்நாட்டைக் கைப்பற்ற=மணமுடிக்க முடியும் என்பதையும் இராமன்=கரிகால் சீதை=சோழநாட்டைப் பலருடன் போட்டியிட்டு அசுரமுறையில் வென்றான் என்பதை இராமாயணத்தில் காண்கிறோம். மாபாரதத்தில் சந்திரகுப்தனின் மகன் கரவேலனை வசிட்டன் நாடுகடத்தியபோது, விசுவாமித்திரனால் வேங்கடமலைக்காட்டுப்பகுதியில் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட திருப்பதியை அடைவதிலும் கடுமையான போட்டி இருந்தது; திருப்பதி=த்ரௌபதியை கரிகால்=தருமனும் பிறரும் அசுரமுறையிலேயே வென்றனர்; ஐவரும் பொதுவாக வைத்து ஆட்சிசெய்தனர் என்பதையும், சீதையும் த்ரௌபதியும் பெண்கள் அல்ல, நாடுகள் என்பதையும் மனதில் கொண்டு வரலாற்றைக் காணவேண்டும். பெண் தனது மார்பைத்க்காட்டி அதன் வடிவமைப்பைப் பிறர் காணச்செய்வதென்பது தனது நாட்டின் வளத்தையும் செழுமையையும் அறிவிப்பதாகும். 12 ஆண்டுகளுக்கு மழைபெய்யாமல் இருக்கச் சபித்தல், 12 ஆண்டுகள் கொடிய பஞ்சம், பிராமணனைக் கொன்ற தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்றவை; மனு=மரீசியின் மகன் பூர்ணகாசியப்பன் செய்த மனுநீதிப்படி வசிட்டனால் தண்டிக்கப்பட்டதை மறைக்கும் சொற்களாகும். மனு: 11.75: "வேதமோதின, அக்னிஹோத்ரிகளாயும் இருக்கிற; மூன்று வருணத்தாருள் எவரேனும்; ஒழுக்கமில்லாத பிராமணனை அக்ஞானத்தால் கொன்றுவிட்டால்; தோஷம் நீங்க ஜிதேந்திரியாளாய், கொஞ்சமாகப் புசித்துக் கொண்டு, ஒரு வேதத்தை முழுவதுஞ் சொல்லிக் கொண்டு, நூறுயோசனை தூரம் புண்ணிய யாத்திரை செய்ய வேன்டும்; (நாடுகடத்துதல்) 11.78: இவ்விதமாகப் பன்னிரண்டு வருசம் விதிப்படி க்ஷவுளஞ் செய்து கொண்டு, அவ்வூர் ஓரத்தில் இருக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தில் இருந்து; பசு, பிராமணர் இவர்களுக்குபகாரஞ் செய்யவேண்டியது; 11.81: இவ்வித விரதமுள்ளவனாய்; மனதையடக்கி 12வருசம் ஸ்த்ரீபோகமில்லாமல் சீவித்தால் தோசத்தினின்றும் நீங்குவான்" என்கிறது. கரிகால், பாவை, செங்குட்டுவன் போன்றோர் தண்டிக்கப்பட்டு சாய்காடுகளில் நாட்டின் எல்லையில் இருந்ததை "அருவழி இருத்தல்" எனத் தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடுகின்றன; யாப்பருங்கலம் விருத்தியுரை மேற்கோள்: கரிகாலை; சேரலத்தின் பொதியைப்பகுதியில் "எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இல்லாமோ?"என்கிறது.
இந்தியப் பழங்குடியினர்; அமண நெறிகளைக் கொண்டோராக நாகம் / நாகர் என வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். புத்தன் யார் என்பதை எவரும் ஆய்வுசெய்யவில்லை; புத்தனும் 25ஆவது தீர்த்தங்கர அமணனே; 23ஆவது தீர்த்தங்கரி ஒரு பெண் என்பதை மறைத்ததையும்; 24ஆவது தீர்த்தங்கரனான மாவீர் யார் என்பதையும் எவரும் ஆய்வுசெய்யவில்லை; பொதுவாகவே அமணத்துக்கு வரலாறில்லாமல் மறைத்து அழிக்கப்பட்டதையும் புத்தமதம் என்பதாக ஒன்று உருவாக்கப்பட்ட காலம்; உலக மதங்கள் உருவாக்கப்பட்ட காலமான 4ஆம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமே என்பதையும் அறிதல் வேண்டும். அதன் பின்னரே இராமாயணமும் மாபாரதமும் உருவாக்கப்பட்டன. தமிழ் இலக்கியங்கள் உட்படப் பிற அனைத்தும் திருத்தப்பட்டு மாற்றியும் மறைத்தும் நீக்கியும் ஏடுகளில் இடம்பெற்றன. நாகரத்னம் என்பது அமணத்தில் தலைமைப்பதவியைக் குறிக்கும் படிமம். நாகருக்கு எதிரான நந்தர் குறித்துப் பழந்தமிழ்ப் பாடல்கள் விரிவாக குறிப்பிடுகின்றன. கடல் நதி நீர் என்பன பல இடங்களில் படைவீரரையும் படையையும் பெரும் படையையும் குறிக்கும் படிமங்களாககவே பெருமளவில் இடம்பெற்றுள்ளன.
ஊர்வசி, உஷையாக இருளாக மாறுவதென்பது கன்னித்தன்மையை இழப்பது அல்லது முறையற்றுத் தாய்மை அடைவதைக் குறிக்கும். பகைவனுக்குத் தங்களது இனப் பெண்ணைக் கொடுத்தும், பகைவனின் இனத்துப் பெண்ணுடன் உறவாடிக் கெடுத்தும்; நந்தர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொண்டுள்ளனர். இவற்றில் முதலாம் வகை, சந்தனு=சந்திரகுப்தனுடன் சத்தியவதி=ஹெலன் கொண்ட உறவு; இரண்டாம்வகை, துஷ்யந்தன்=முசுகுந்தனால் சகுந்தலை=கரிகாலின் தங்கை பாவை கெடுக்கப்பட்டது. மூன்றாவதாகவும் ஒருவழியைக் கைக்கொண்டுள்ளனர் என்பதை விதுரனின் வரலாற்றில் காண்கிறோம்; நந்தரால் அம்பிகாவின் பணி(அடிமை)ப்பெண்ணுக்குப் பிறந்ததால் சூத்திரனாக்கப்பட்டவனே விதுரன்; விதுரனின் மகனே நகுஷ இன =நெடுஞ்செழியன். செழியனின் உதவியுடனேயே சோழநாடான சீதையைக் கவர முயன்றனர்.
வரலாறும் மாபாரத மாந்தரும்
சந்தனு=சந்திரகுப்தனின் ஆசை மனைவி ஹெலன்=சத்தியவதியைப் போலவே வசிட்டனின் மனைவியாக மற்றொரு சத்தியவதி இடம் பெறுகிறாள்; இந்த வசிட்டனின் மகனே சமதக்கினி; ஆயினும் வசிட்ட / சமதக்கினிக்கும் திருத ராட்சசனைப் போலவே நூறு புதல்வர்கள் என உள்ளது. அத்துடன் சந்திரகுப்தனின் ஆசைமனைவி சத்தியவதி திருமணத்துக்கு முன்னர் பராசரனுடன் கூடி வியாசனைப் பெற்றாள் என மாபாரதம் ஆதிபருவம் குறிப்பிடுகிறாது. வசிட்டனின் மகன் சமதக்கினிக்குப் பிறந்தவனே பராசரன் என மாபாரதம் உறுதிப்படுத்தவில்லை. பராசரனின் மகனே மாபாரதத்தை இயற்றிய வியாசன் எனக்காண்கிறோம். வசிட்டனின் மனைவி சத்திய வதிக்கும் சத்தியவதியின் தந்தை கன்ய குப்ச மன்னைன் காதியின் மனைவிக்கும் பிறந்தோரே சமதக்கினியும் விசுவாமித்திரனும். இவர்களைப் பிறப்பிக்க வசிட்டன் ஏதேதோ திட்டமிட்டபோதிலும் பெண்களிலிருவரும் திட்டத்தைத் தலைகீழாக மாற்றியதால் தனது மனைவி சத்தியவதிக்குப் பிறந்த சமதக்கினியை மட்டும் பிராமணனாக ஏற்றுக்கொண்டு சத்தியவதியின் தாய்க்குப் பிறந்த விசுவாமித்திரனை ஒதுக்கியதாகவும் காண்கிறோம். சமதக்கினியின் தந்தை யார்? எந்த இலக்கியமும் தெளிவுபடுத்தவில்லை.
ரிக்வேதம்-3-53.24: "விசுவாமித்திர குலப் பாரதர்க்கும் வசிட்ட குலத் திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனக் குறிப்பிடுகிறது. இந்த ரிக்வேத வாசகத்தைக் கொண்டுதான் நமது வரலாற்றைக் காணவேண்டும். காண்போம். 

 http://nhampikkai-kurudu.blogspot.com

No comments:

Post a Comment