Search This Blog

Friday, December 6, 2013

நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். (Nelson Mandela who completed his life's journey at the age of 95.)

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 வயதில் சற்று முன்னர் காலமானார். இந்த அற்புதமான கறுப்பின மக்களின் விடுதலைப்போராளிக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

-- @[501293243228925:274:ஆசிரியர் பக்கம்] --
மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.

மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941 ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.

அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958.ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.

தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.

கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்” என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.

அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.

தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ம் ஆண்டு ஜுன் 12 ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.

பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.

மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட் டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.

மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச் சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மண்டேலா விடுதலையானதும், பிரதமர் வி.பி.சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங் எழுதிய பாராட்டுக் கடிதம் கொடுக்கப் பட்டது. “உங்களது சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வி.பி.சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

“இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.

நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை.1994 மே 10 ந் தேதி அவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.

அவர் அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
மண்டேலா கடந்து வந்த பாதை...

தென் ஆப்பிரிக்காவின் (Qusu) கிராமத்தில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாலா. 9 வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட மண்டேலா, தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து கொண்டே தொலைதூரக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஜோகன்னஸ்பர்க் சென்று சட்டம் பயின்ற மண்டேலா, பின்னர் (African Legal Partnership) என்ற அமைப்பை நிறுவினார்.

ஆப்ரிக்க காங்கிரசில் மண்டேலா

1942-ல் ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்த மண்டேலா, 1950-ல் அதன் இளைஞர் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பின்னர், 1952-ல் அக்கட்சியின் துணைத் தலைவராக தேர்வானார். கறுப்பர், இந்தியர் உள்ளிட்டோரின் சுதந்திரத்திற்காக பிரச்சாரம் செய்த மண்டேலா, அதே ஆண்டின் இறுதியில் கைது செய்யப்பட்டார். முதன் முறையாக மண்டேலா அனுபவித்த சிறைவாசம்தான் அவரது எதிர்காலத்தை செதுக்கியது என கூறலாம். இனவெறிக்கு எதிராகவும், சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

27 ஆண்டுகள் சிறைவாசம்

1960ம் ஆண்டு கறுப்பர்கள் மீது தென் ஆப்ரிக்க அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட, நெல்சன் மண்டேலா ஆயுதம் தூக்கவும் தயங்கவில்லை. அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக 1962-ல் கைது செய்யப்பட்ட மண்டேலா 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். பின்னர், சதிக் குற்றச்சாட்டின் கீழ் 1964ம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க அதிபராக

மக்களின் தொடர் போராட்டத்துடன் உலக நாடுகள் கொடுத்த அழுத்தமும் சேர்ந்து கொள்ள 1990ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவித்தது தென் ஆப்பிரிக்க அரசு. மண்டேலாவின் அறவழிப் போராட்டத்தால் தென் ஆப்ரிக்கா, ரத்தம் சிந்தாமல் அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய மக்களாட்சி நாடாக மலர்ந்தது. அதன் முதல் அதிபராக 1994-ம் ஆண்டு மண்டேலா தேர்வு செய்யப்பட்டார்.

முன்னுதாரணமாக வாழ்ந்த தலைவர்

தென் ஆப்ரிக்காவில் இனவெறி ஒழிந்து மக்களாட்சி மலர அயராது பாடுபட்ட நெல்சன் மண்டேலாவுக்கு 1993ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவின் முதல் அதிபராக சிறப்பாக பணியாற்றிய மண்டேலா, 5 ஆண்டுகளுக்குப் பின் பதவியை துணை அதிபர் (Thabo Mbeki)யிடம் ஒப்படைத்து, பிற தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். பதவி விலகினாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிய மண்டேலா உலகம் முழுவதும் போற்றுதலுக்குரிய ஒரு தலைவராக, தென் ஆப்ரிக்காவின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 வயதில் சற்று முன்னர் காலமானார். இந்த அற்புதமான கறுப்பின மக்களின் விடுதலைப்போராளிக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

If anyone has inspired me in life that is no one but Nelson Mandela who completed his life's journey at the age of 95.

I read his autobiography, The Long Walk to Freedom, with fascination and awe. I was questioning myself how can a man who had been beaten by the system be so magnanimous in victory? But that was him. He was responsible for dismantling the Apartheid rule of the White Supremacists, creating a multi-racial democracy and establishing the Rule of Law in his country. When Winnie Mandela, his wife and freedom fighter whilst he was languishing in jail, was charged with the murder of a youth, the laws of the country were applied to her without favour, an act which can be compared only to what King Elara, a Chola King in ancient Lanka in the 2nd century BCE, did to his Son who was accused of killing a calf by driving a chariot recklessly on the streets of the city of Anuradhapura. He stepped down as the President of South Africa after serving just one term and became a world peace maker, a bigger role in the international arena that can never be thought of for a third world country leader.
The people of Johannesburg today are not mourning his death, but celebrating his life which cannot be compared to anyone who is living or dead.
May I wish that his life be the guiding light to many of the youngsters in SL today who are disillusioned about their role and destiny in life!

Weerakoon Wijewardena

No comments:

Post a Comment