Search This Blog

Friday, October 25, 2013

காங்கிரஸின் முகங்கள்

# ஜவஹர்லால் நேரு முகமது அலி ஜின்னா ஆகிய இருவருமே ஹாரிஸ் கல்லூரியில் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்களுடன் எட்வினா என்னும் பிரிட்டிஷ் பெண்ணும் சேர்ந்தே படித்தார். மூவருக்குள்ளும் மிக ஆழமான புரிதல் இருந்தது. ( இடக்கரடக்கல் ) இருந்தாலும் நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இடையில் எட்வினா ஒரு பகைத்தீயைப் பற்றவைத்ததில் காலம் காலமாக பற்றி எரிந்தது.

# பின்னாளில் நேருவும் ஜின்னாவும் வழக்கறிஞர்களாகத் தோல்வியுற்றிருந்தாலும் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து இணைந்து போராடினாலும் இந்த இருவருக்குள்ளுமே எட்வினா மூட்டிய தீ அணையவே இல்லை.

# கடைசி வைஸ்ராயாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மௌண்ட் பேட்டனுடன் அவரது மனைவியும் வந்தார். ஆம். இம்முறை எட்வினா மௌண்ட் பேட்டனாக. இந்தியாவைத் துண்டாடும் நோக்குடன் பிரிட்டிஷ் அனுப்பிய விஷக்கன்னியாக எட்வின் மீண்டும் வந்தாள்.

# மூவரிடையே ( நேரு ஜின்னா எட்வினா) மீண்டும் தழைத்தது பழைய புரிதல். ( இடக்கரடக்கல் ) இந்தியாவின் சுதந்திரம் நிச்சயமானது. ஆனால் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் துண்டாடிவிட்டுச் செல்லும் பிரிட்டிஷாரின் நோக்கத்துக்கு இந்த மூவர் கூட்டணி எப்படி பலமான தூண்டுதலாக இருந்தது என்பது தான் ட்ரஸ்ட் வித் டெஸ்டினி.

# ஒன்றுபட்ட இந்தியாவுக்கு பிரதமராக இருக்க நேரு ஜின்னா இருவருமே முனைந்து நின்றபோது எட்வினா தோற்றுவித்த ( முன்னரே பிரிட்டிஷாரால் முடிவுசெய்யப்பட்ட ) ஆலோசனையின் பேரில் இந்தியா பாகிஸ்தான் ஆக இரண்டு கூறாக்கி இந்தியாவுக்கு நேருவையும் பாகிஸ்தானுக்கு ஜின்னாவையும் பிரதமராக தேர்ந்தெடுப்பது என்ற கருத்து திணிக்கப்பட்டது.

# இதை எதிர்த்த மஹாத்மா காந்தி ஜின்னாவை பிரதமராக்கினால் இந்தியா பிளவுபடாமலேயே இருக்கும் என்று நேருவை நிர்ப்பந்தித்த போது நேருவின் பதவி ஆசை அதை ஏற்றுக்கொள்ள வைக்கவில்லை. இந்தியா இரு கூறானது தவிர்க்க வியலாத நிலையானது.

# ஜின்னாவுக்கு எலும்பு கேன்சர் இருப்பதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் எனவும் அவரது டாக்டர் அறிவித்ததன் பேரில் காந்தி மீண்டும் இறுதி முயற்சியாக நேருவிடம் சில மாத காலம் ஜின்னாவை ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு பிரதமராக்கும் படியும் பின்னர் ஜின்னா காலத்துக்குப்பின்னர் நேரு பிரதமர் ஆகலாம் என்ற காந்தியின் யோசனை நேருவின் பதவி வெறிக்கு முன்னால் எடுபடவில்லை. ( பாகிஸ்தான் பிரதமராக ஆன ஜின்னா அடுத்த ஏழுமாதத்தில் இறந்தார் என்பது வரலாறு )

# பிளவுபட்ட இந்தியாவுக்கு பிரதமர் யாராக இருக்கவேண்டும் என ஆலோசிக்கப்பட்ட போது அப்போதிருந்த காங்கிரஸ் வொர்க்கிங் கமிட்டியின் 15 பேரில் ஒருவர் ஆப்செண்ட் ஆக 13 பேர் சர்தார் வல்லப பாய் படேலுக்கு ஆதரவாகவும் ஒரே ஒருவர் நேருவுக்கும் ஆதரவு அளித்தனர்.

# இதனால் வெகுண்ட நேரு இந்திய தேசிய காங்கிரஸை பிளவு படுத்தி தனது கோஷ்டியினருடன் பிரிட்டிஷாரைச் சேர்த்துக்கொண்டு பிரதமராவதை முடிவு செய்ய முற்பட்டார். காந்தி மேலும் இன்னலுக்குள்ளானார்.

# காந்தியின் இந்த சத்ய சோதனையில் நேருவின் பதவி ஆசை வென்றது. காங்கிரஸில் காந்தி சொன்னது தான் இறுதி என்ற நிலையில் அனைவருமே காந்தியின் சொல்லை ஏற்றுக்கொண்டார்கள்.

# இந்தியா சுதந்திரம் அடையும் ஆகஸ்டு 15க்கு முதல் நாள் ஆகஸ்டு 14 இல் பாகிஸ்தான் சுதந்திரப்பிரகடனம் செய்யப்பட்டது.

# ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி என்று செங்கோட்டையில் நேரு முழங்க நடந்த சுதந்திர தின விழாவில் காந்தி கலந்துகொள்ளவே இல்லை.

# இந்திய தேசிய காங்கிரஸை இத்துடன் கலைத்துவிடலாம் என்ற காந்தியின் யோசனையைக் கூட நேரு ஏற்கவில்லை. பதவி வெறி அன்றுமுதல் இதோ இன்றுவரை அந்தக் குடும்பத்தில் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment