Search This Blog

Sunday, October 27, 2013

ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமிதத்தால் விம்ம வேண்டிய ஒரு பாடல்!!



நாம் யார்? நமது மரபு எத்தகையது என்பதற்கு சான்று.

சோழன் செங்கணானிடம் போரில் தோற்ற சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை சிறை பிடிக்கப்படுகிறான். குடவாயிற் கோட்டத்துச் சிறைக் கொட்டடியில் அவனுக்கு தாகம் எடுக்கிறது. சிறைக் காவலன் அசட்டையாக தாமதம் செய்து தண்ணீர் தருகிறான். அவமானத்தை உணரும் இரும்பொறை எழுதிய பாடலின் பொருள் :

இறந்துப் பிறக்கும் குழந்தையை கூட அப்படியே புதைத்து விடாமல் வீர மரபில் பிறந்தது என்பதற்கு அடையாளமாக அதன் மார்பை வாளால் கீறி புதைக்கும் வீரத் தமிழ் மரபில் வந்த வீரன் தனக்கு அசட்டையாக நீரையும், உணவையும் தரும் பகைவனிடம் பிச்சை கேட்டு உண்பான் என நினைக்கிறாயா? என்று கேட்டு விட்டு உணவும்,நீரும் உண்ணாமல் வடக்கிருந்து உயிர் நீப்பதை விவரிக்கும் பாடல் வரிகள்.

உலகின் எந்த இனமும் இவ்விதமான பாடல் பெரும் பாக்கியத்தை பெறவில்லை.பாடல் வழி இன்னமும் வென்று வாழ்கிறான் இரும்பொறை.

அவமானத்தை உணரும் இரும்பொறை எழுதிய பாடல்,

திணை : பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்

"குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?"

1 comment: