Search This Blog

Monday, August 26, 2013

நவநீதம்பிள்ளை

நவநீதம்பிள்ளை 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நாதல் மாகாணத்தின் டேபர்ன் நகரில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தார். தமிழ் வம்சாவளியினரான இவரது தந்தை ஒரு பஸ் சாரதியாக பணியாற்றினார்.

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் டேர்பனில் வாழும் தமது தமிழ் சமூகத்தின் உதவியுடன் நாதல் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டு பீ.ஏ பட்டத்தை பெற்றார்.

சட்டத்தரணியான கொபி பிள்ளை என்பவரை 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்தார்.

1982 ஆம் ஆண்டு ஹாவர்ட் சட்ட பல்கலைக்கழகத்தில் எல்.ஏ.எல்.எம். பட்டத்தை பெற்ற அவர், அதே பல்கலைக்கழகத்தில் 1988ம் ஆண்டு சட்ட விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றார்.

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் தென்னாபிரிக்கர் நவநீதம்பிள்ளையாவார். அத்துடன் தென்னாபிரிக்க உயர்நீதிமன்றத்தின் வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி பிள்ளை என்பது முக்கியமானது.

அன்றைய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, நவநீதம்பிள்ளையை நீதிபதியாக நியமித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ருவாண்டா தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
Photo: நவநீதம்பிள்ளை 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நாதல் மாகாணத்தின் டேபர்ன் நகரில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தார். தமிழ் வம்சாவளியினரான இவரது தந்தை ஒரு பஸ் சாரதியாக பணியாற்றினார்.

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் டேர்பனில் வாழும் தமது தமிழ் சமூகத்தின் உதவியுடன் நாதல் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டு பீ.ஏ பட்டத்தை பெற்றார்.

சட்டத்தரணியான கொபி பிள்ளை என்பவரை 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்தார்.

1982 ஆம் ஆண்டு ஹாவர்ட் சட்ட பல்கலைக்கழகத்தில் எல்.ஏ.எல்.எம். பட்டத்தை பெற்ற அவர், அதே பல்கலைக்கழகத்தில் 1988ம் ஆண்டு சட்ட விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றார்.

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் தென்னாபிரிக்கர் நவநீதம்பிள்ளையாவார். அத்துடன் தென்னாபிரிக்க உயர்நீதிமன்றத்தின் வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி பிள்ளை என்பது முக்கியமானது.

அன்றைய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, நவநீதம்பிள்ளையை நீதிபதியாக நியமித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ருவாண்டா தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

No comments:

Post a Comment