Search This Blog

Friday, August 30, 2013

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்..


......................................................................................... 
ஒல்லியான முகவாட்டம் கொண்ட நீங்கள்,

தாடி வளர்த்துக்கொண்டால் பெரும்பாலான பெண்கள் 

ஓட்டளிப்பார்கள் என்கிற ஒரு சிறுமியின் கருத்தை, நன்றி

சொல்லி ஏற்றவர், தன் இறுதி நாள்வரை உலகிற்கு தன்னை

அதுப்படித்தான் வெளிப்படுத்திகொண்டார்.

இவர், ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர்,

‘‘லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு

இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!’’

என நக்கலாக சொல்ல,

‘‘அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை

அல்லவா காட்டுகிறது.

பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன்.

அதே சமயம்,

செருப்பு தைத்தவரின் மகனுக்கு நாடாளவும் தெரியும்’’

என்றார் தனக்கே உண்டான அமைதியுடன்.

அமெரிக்கவாழ் கறுப்பின மக்கள் இன்றளவும் போற்றும் ஒரு மகத்துவமான தலைவராக விளங்கிய லிங்கன் 3 முறை அமெரிக்க ஜனாதிபதியாக களம் கண்டு வெற்றி பெற்றவர்.

அடிமை மக்கள் என்கிற ஓர் வர்க்கமே இனி அமெரிக்காவில் இருக்கக் கூடாது;

எல்லோரும் ஒரே சமமான அமெரிக்க பிரஜைகள் என்கிற ஓர்

மகத்துவத்திற்காக போராடியவர்.

தன் தந்தையிடமிருந்து நல்ல குணத்தையும் போராடும்

முறையையும் கற்றிருந்த இவர், 1865 ஆம் ஆண்டு ஆகஸ்ட்

14 ந்தேதி தனது மனைவியுடன்,

"அவர் அமெரிக்கன் கசின்" என்ற நாடகத்தை

ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் (john wilkes booth)

என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட

அமெரிக்காவின் பெருந்துன்ப நிகழ்வு அப்போது

அரங்கேறியது.

ஆம், மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது.

காலங்கள் மாறின.

பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன.

தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது.

ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த

மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க

மேதையான ஆபிரகாம் லிங்கன் மட்டும்

அப்போது உயிரோடு இல்லை..


-உடுமலை.சு.தண்டபாணி

நோய்களை தடுத்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 14 உணவுகள்



உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உணவிலிருந்து. உடுத்தும் உடையிலிருந்து கவனமாக இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதால், முதுமைத் தோற்றத்தைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது என்பது தேவையான ஒன்று. அன்றாடம் நாம் உழைத்து சேமிப்பது அனைத்தும் வயிற்றுக்கு தான். எனவே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்.

ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்து உள்ளது. ஒரே ஒரு வைட்டமினின் சத்து மட்டும் உடலுக்கு போதாது. எல்லா வித சத்துக்களும் உடலுக்கு அவசியம். அதில் வைட்டமின் சி கண்ணிற்கு நல்லது, ஓமேகா-3 இதயத்திற்கு நல்லது என ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு சக்தியை உடலுக்கு தந்து, மனதுக்கும், உடலுக்கும் தேவையான பலத்தை அளிக்கின்றது. எனவே அளவான உணவை தேவையான சத்துக்களுடன் எடுத்துக் கொண்டாலே, ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வாழ முடியும். குறிப்பாக நோய் இல்லாமல் இருந்தாலே, இளமையுடன் காட்சியளிக்க முடியும். சரி, இப்போது உடலில் ஏற்படும் நோய்களைத் தடுத்து, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் சில உணவுகள் பற்றிப் பார்ப்போம

ஆப்பிள்/திராட்சை/செர்ரி/ஸ்ட்ராபெர்ரி

மேற்கூறியவற்றில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மேலும் இந்த பழங்களில் எலாஜிக் அமிலங்கள் உள்ளன. இவை புற்றுநோய் வருவதை தடுக்கின்றது.

முட்டைக்கோஸ் குடும்பம்

brassica குடும்பம் என்று சொல்லப்படும் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ராக்கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் இந்த காய்கறிகளில் பீட்டா கரோட்டின், indolesglucoinnolates மற்றும் ஐஸோதியோசயனைடுகள் (குறிப்பாக ப்ரோக்கோலியில் காணப்படும்) புற்றுநோயை தடுக்கின்றது.

மிளகாய்/மிளகுத்தூள்

மிளகாய் வயிற்றை சேதப்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது நிபுணர்கள் மிளகாயில் இருக்கும் லேசான எரிச்சல் வயிற்றின் பாதுகாப்பிற்கு உதவுகின்றது என்று கூறுகின்றனர். இந்த காரம் புண் மற்றும் செல் பாதிப்பை தடுக்க உதவும். மேலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் நோயெதிர்ப்பு எதிர்ப்பு சக்தி தரும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அதிலும் குடைமிளகாயின் உள்

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் புற்றுநோயை தடுக்க உதவும். இவற்றில் இருக்கும் வைட்டமின் சி, லிமொனின் போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை பாதித்து அந்நோய் தாக்காமல் காக்கின்றது. மேலும் சருமத்தை பொலிவோடு, இளமையுடன் வைத்துக் கொள்கிறது.

பூண்டு மற்றும் வெங்காயக் குடும்பம்

பூண்டில் உள்ள அல்லிசின், மோசமான கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைத்து, இரத்தத்தின் நல்ல கொழுப்புத் தன்மையை அதிகப்படுத்தி, உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றது. இதனால் இவை இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இது ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. வெங்காயம், வெங்காயத் தாள், சின்ன வெங்காயம் போன்றவற்றில் ஆலியம் என்ற தன்மை உள்ளது. இவை இதயம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ளது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால்கள் புற்றுநோயை தீர்க்க உதவுகின்றது என்று கூறப்படுகின்றது. இது இதயத்திற்கும், கல்லீரலுக்கும் மிகவும் நல்லது.

கீரைகள்

பசலைக் கீரை, வெந்தயக்கீரை, லெட்யூஸ், பார்ஸ்லி, செலரி போன்றவற்றில் உள்ள பீட்டா கரோட்டின் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஓட்ஸ்

இதயத்திற்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. அதற்கு தினமும் ஒரு கப் ஓட்ஸ் எடுத்துக் கொண்டால், சக்கரை அளவை கட்டுப்படுத்தி, இதயத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

மீன்

கானாங்கெளுத்தி, சால்மன், சூரை, மத்தி, கடல் மீன், ஏரி, ட்ரௌட் போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரத்த உறைவைப் போக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் கீல்வாதம், சரும அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் கொலிட்டஸ் போன்ற அழற்சி ஏற்படுத்தும் நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

ஆலிவ்/ரேப்சீடு எண்ணெய்

அதிகமாக எண்ணெய் எடுத்து கொள்வது கெடுதல் தான். ஆனால் பதப்படுத்தப்பட்ட எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக மோனோ அன்சாச்சுரேட்டர் (MUFA) ரக எண்ணெய் மிகவும் நல்லது. இது ஆலிவ் மற்றும் ரேப்சீடு எண்ணெயில் அதிகமாக உள்ளது.

பப்பாளி/கேரட்

மற்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிற காய்கறிகளான பூசணி, மாம்பழம், ஆப்ரிக்காட், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை விட, பப்பாளி மற்றம் கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது

சோயா பொருட்கள்

சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் மற்றும் டோஃபு உணவானது குறைந்த கொழுப்பு கொண்ட கால்சியம் நிறைந்த உணவாகும். ஜெனிஸ்டின் நிறைந்த சோயா தயாரிப்புகள் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்தது.

தக்காளி

புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது தக்காளி. லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டு போன்றவை புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதில் கவுமாரிக் மற்றும் கோல்ரோஜினிக் அமிலம் அதிகமாக இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கின்றது.

தயிர்

ஆய்வு ஒன்றில் பாக்டீரியா அதிகம் உள்ள தயிரானது செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று கூறுகின்றது. அதுமட்டுமின்றி, இதில் கால்சியம் அதிக உள்ளதால், இந்த உணவு ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக பயன்படுகின்றது.

எனவே மேற்கூறிய அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் நோய்கள் தாக்காமல், சருமமும் நன்கு இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படும்

இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்



நாய்களுக்கு ஏன் வாழ்நாளானது வெறும் 10-12 வருடம் என்பது தெரியுமா? ஏனெனில் நாய்களின் இதயத் துடிப்பானது மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத் துடிப்பு மனிதர்களுக்கு வந்தால், அது மிகவும் ஆபத்தானது. அதிலும் எப்போது ஒருவரின் நாடித் துடிப்பானது அதிகமாகவோ அல்லது முறையற்றோ இருந்தால், அதற்கு இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். மேலும் இதயத் துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால் தான் படபடப்பு ஏற்படுகிறது.

பொதுவாக இதயம் ஒரு இயந்திரம் போன்றது. அந்த இயந்திரமானது குறிப்பிட்ட அசைவை மேற்கொண்டால் தான், நீண்ட நாட்கள் இருக்கும். அதைவிட்டு, அது வேகமாக இயங்கினால், அது நாளடைவில் பழுதடைந்து தூக்கிப் போட வேண்டிய நிலை தான் ஏற்படும். ஆகவே இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்வதன் மூலம், இதயத்துடிப்பின் அளவை சீராக வைக்கலாம்.

இதயத் துடிப்பு வேகமாவதற்கு மனஅழுத்தமும் ஒரு காரணம். மேலும் உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இதயத் துடிப்பின் அளவு அதிகரிக்கும். எனவே இத்தகைய பிரச்சனையைப் போக்கும் வகையிலும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இப்போது இதயத் துடிப்பை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

தயிர்

தயிருக்கு இதய படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனில் இதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியச் சத்தானது மூளை மற்றும் இதயம் தொடர்பு கொள்ள உதவும் ஒரு முக்கியமான சத்தாகும். எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இதயத் துடிப்பின் வேகத்தை குறைக்கலாம்.

பூண்டு

அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டுகளில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் உள்ளது.

உப்பு

அதிகமான இதயத் துடிப்பு மட்டும் பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. சிலசமயங்களில் மிகவும் குறைவான இதயத் துடிப்பு இருந்தாலும், பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், உப்புள்ள உணவுகளை சாப்பிட்டால், சீராக வைக்கலாம். ஆனால், அதிகமான இதயத் துடிப்பு உள்ளவர்கள், உப்பை சேர்க்கவே கூடாது.

நட்ஸ்

நட்ஸில் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை பலவீனமான இதயம் உள்ளவர்கள் சாப்பிட்டால், இதயம் வலிமையாவதோடு, இதயத் துடிப்பும் சீராக இருக்கும்.

டோஃபு

டோஃபுவில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய டோஃபு இதய படபடப்பை போக்குவதில் மிகவும் சிறந்தது. மேலும் இந்த உணவுப் பொருளில் கெட்ட கொலஸ்ட்ரால் இல்லாததால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது.

மீன்

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இவை இதயத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு உணவுப் பொருளாகும். எனவே இதனை உட்கொண்டால், இதயத் துடிப்பு முறையாக இயங்கி, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

உலர் திராட்சை

உலர் திராட்சையிலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம், வேகமான இதயத் துடிப்பின் அளவானது குறையும்.

ஓட்ஸ்

ஓட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், தமனிகளில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்திருப்பதால், இது இதயத்தின் துடிப்பை சீராக வைக்கும்.

புதினா

புதினா, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளில் முதன்மையானதாக இல்லாவிட்டாலும், மருத்துவக்குணம் அதிகம் கொண்டது. அதிலும் இதனை சாப்பிட்டால், இதய தசைகள் வலிமையாவதுடன், இதயத்தில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்.

பூசணிக்காய்

பூசணிக்காயில் மக்னீசியம் என்னும் இதயத் துடிப்பை சீராக வைக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.

RNAi Treatment Steps Up




Laguna Design/Science Source
Quieting disease. siRNA molecules like the one shown here (purple and green coils) may treat an inherited liver illness, a new study reports.
RNA interference (RNAi), a technique for silencing genes that shows potential for treating diseases, has been like a hot baseball prospect who hasn’t proven he can play in the big leagues. But now RNAi has turned in a performance that is winning researchers’ praise. A new study shows that the approach can dramatically and safely cut levels of a protein that causes a rare liver disease.
Our cells rely on RNAi—deploying diminutive RNA molecules such as microRNAs and small interfering RNAs (siRNAs)—to turn down activity of specific genes. Researchers only discovered this process in the late 1990s, but they’ve already begun dozens of clinical trials to gauge whether infusing patients with these small RNAs works against a range of diseases, from lung infections to liver cancer to age-related macular degeneration, a sight-stealing condition that mainly affects people over the age of 50. Although some results are promising, what remains unclear is whether an effective dose of RNAi will also be safe, says nucleic acid biologist Mark Kay of Stanford University in Palo Alto, California.
In the new work, neurologist Teresa Coelho of the Hospital de Santo Antonio in Portugal and colleagues tested RNAi in patients who had transthyretin amyloidosis, a fatal genetic disease in which liver cells pump out excess amounts of a protein called transthyretin. Normally, transthyretin ferries hormones through the blood, but the extra protein builds up in the nerves, the heart, and elsewhere in the body. Although liver transplants can lengthen the lives of some patients, the disease remains incurable.
The team infused 24 transthyretin amyloidosis patients with an siRNA that curbs cells’ production of the protein. Because RNA-destroying enzymes prowl the spaces between our cells, the siRNAs were tucked inside tiny lipid droplets, known as lipid nanoparticles. Control patients received an infusion of saline. Using a group of healthy subjects, the researchers also tested a slightly different lipid nanoparticle that carried the same siRNA.
In the transthyretin amyloidosis patients, siRNA treatment cut transthyretin levels by 38% after 7 days, the researchers report online today in The New England Journal of Medicine. The healthy patients who received the alternative lipid nanoparticles showed an even bigger decrease, averaging as much as 87%. Those results reveal that liver cells absorbed the lipid nanoparticles and the siRNAs inside turned down transthyretin output. Coelho calls this an “important reduction” in the protein, though the researchers didn’t determine whether siRNA slowed the progress of the disease. They will be measuring that in a 15-month follow-up study that will take place in the United States, Europe, and South America.
Some patients developed allergylike reactions, with symptoms such as flushing and chest tightness. But these problems usually went away if the delivery of the nanoparticles was stopped and then resumed at a slower pace, Coelho says.
The study “unambiguously shows that you can achieve a robust [protein decrease] in humans using RNAi therapeutics,” Kay sats. “This opens the door to medicinal RNAi,” adds molecular biologist David Corey of the University of Texas Southwestern Medical Center in Dallas.
siRNAi therapy could also work against other liver diseases, says molecular geneticist John Rossi of City of Hope in Duarte, California. But he cautions that “since the lipid carriers primarily target the liver, it is not apparent to me if nonliver based diseases can be treated in a similar fashion.”
Controlling diseases such as transthyretin amyloidosis would presumably require multiple treatments over several years, so researchers also need to find out if the siRNA and lipid nanoparticle combination is safe over the long term, Kay says.
thanks http://news.sciencemag.org

குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்!




சாதாரணமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.



Thursday, August 29, 2013

சங்க இலக்கியங்கள்

தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது. .தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

வீரம்

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.

காதல்:-

தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும். இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள். அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.


நட்பு

சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.

முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.

விருந்தோம்பல்

‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு'
” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
” என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.
இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்....
தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது. .தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

வீரம்

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.

காதல்:-

தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும். இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள். அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.


நட்பு

சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.

முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.

விருந்தோம்பல்

‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு'
” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
” என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.
இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்....

Wednesday, August 28, 2013

கோகுலாஷ்டமி : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...

நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிகாக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராசலீலா, தகி அண்டி என பல வடிவங்களில் அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது. வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம். ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எந்த விதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நடைமுறை கூட நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டதுதான்.

மற்ற திதிகள் போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில், மகாவிஷ்ணு நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம். கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணனாக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்‘ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது. இப்படி ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள், தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம். கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபடுவர். அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம். இதைத்தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

என்று பாடியருளி, கிருஷ்ணனை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார். குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சத்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சத்புத்திர பாக்ய யோகத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!



சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

Warning ahead! 99 per cent of Car Owners can't understand their dashboard lights ,what these symbols mean?

பழமொழிகள்:-



பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.

வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.

குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்

பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.

காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.

நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.

அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.

அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.

அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.

அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.

குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்

காட்டாமணக்கின் பயன்பாடு ஏராளம்...



பொதுவாக காட்டாமணக்கு என்றால் இயற்கை எரிபொருளை கொடுக்கும் தாவரம் என்று கூறுவர். ஆனால், காட்டாமணக்கு ஒரு சிறந்த மூலிகை பயிர் ஆகும். இது அனைத்து பகுதிகளிலும் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. காட்டாமணக்கு தாவரத்தில் இருந்து வரும் பால் போன்ற திரவம் பல் வலிக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.

காட்டாமணக்கின் நுனிக்குச்சிகளை கொண்டு பல் துலக்கும் கிராமத்தினர் தற்போதும் உண்டு. இதனால் பல் சொத்தை, பற்சிதைவை உண்டாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், சித்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த பால் போன்ற திரவத்தில் ஜெட்ரோபின், ஜெட்ரோபாம், காகேன் போன்ற வீரியம் நிறைந்த ஆல்கலாய்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும், இந்த வெள்ளை திரவத்தை தேள் அல்லது தேனி கொட்டிய இடங்களில் வைத்தால் கொட்டிய பூச்சியின் கொடுக்கு வெளியில் வந்துவிடும் எனவும் கிராமங்களில் கூறுவர். காட்டாமணக்கின் இலைச்சாறும் மருத்துவத்திற்கு உதவுகிறது. இதில் அபிஜெனின், விட்டெக்சின், ஜசோவிட்டெக்கின் என்கின்ற மூலக்கூறுகள் அதிகளவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் மலேரியா, மூட்டுவலி, தசைவலிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மேலும், மஞ்சள்காமாலை, புற்றுநோய், இருமல், கக்குவான், வீக்கம், வயிற்றுப்புண், நிமோனியா, வீக்கம், வாதநோய்களை குணப்படுத்த உதவுகின்றன என ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றன.

இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பாம்புகடிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வேரை இடித்து சாறாக்கி கொப்பளித்தால் பல் ஈறுகளில் இருந்து வடியும் ரத்தகசிவை உடனடியாக நிறுத்தலாம். இத்தாவரத்தின் விதையில் மட்டும் சில நச்சுப்பொருட்கள் உள்ளதால் இதை மட்டும் மருத்துவத்திற்கு நேரடியாக பயன்படுத்த முடியாது. இன்றைய காலகட்டங்களில் பல மூலிகை பயிர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதில், காட்டாமணக்கு பயிரையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம்


காட்டாமணக்கின் பயன்பாடு ஏராளம்...

பொதுவாக காட்டாமணக்கு என்றால் இயற்கை எரிபொருளை கொடுக்கும் தாவரம் என்று கூறுவர். ஆனால், காட்டாமணக்கு ஒரு சிறந்த மூலிகை பயிர் ஆகும். இது அனைத்து பகுதிகளிலும் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. காட்டாமணக்கு தாவரத்தில் இருந்து வரும் பால் போன்ற திரவம் பல் வலிக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.

காட்டாமணக்கின் நுனிக்குச்சிகளை கொண்டு பல் துலக்கும் கிராமத்தினர் தற்போதும் உண்டு. இதனால் பல் சொத்தை, பற்சிதைவை உண்டாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், சித்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த பால் போன்ற திரவத்தில் ஜெட்ரோபின், ஜெட்ரோபாம், காகேன் போன்ற வீரியம் நிறைந்த ஆல்கலாய்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும், இந்த வெள்ளை திரவத்தை தேள் அல்லது தேனி கொட்டிய இடங்களில் வைத்தால் கொட்டிய பூச்சியின் கொடுக்கு வெளியில் வந்துவிடும் எனவும் கிராமங்களில் கூறுவர். காட்டாமணக்கின் இலைச்சாறும் மருத்துவத்திற்கு உதவுகிறது. இதில் அபிஜெனின், விட்டெக்சின், ஜசோவிட்டெக்கின் என்கின்ற மூலக்கூறுகள் அதிகளவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் மலேரியா, மூட்டுவலி, தசைவலிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மேலும், மஞ்சள்காமாலை, புற்றுநோய், இருமல், கக்குவான், வீக்கம், வயிற்றுப்புண், நிமோனியா, வீக்கம், வாதநோய்களை குணப்படுத்த உதவுகின்றன என ஆயுர்வேத மருத்துவம்  கூறுகின்றன.

இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பாம்புகடிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வேரை இடித்து சாறாக்கி கொப்பளித்தால் பல் ஈறுகளில் இருந்து வடியும் ரத்தகசிவை உடனடியாக நிறுத்தலாம். இத்தாவரத்தின் விதையில் மட்டும் சில நச்சுப்பொருட்கள் உள்ளதால் இதை மட்டும் மருத்துவத்திற்கு நேரடியாக பயன்படுத்த முடியாது. இன்றைய காலகட்டங்களில் பல மூலிகை பயிர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதில், காட்டாமணக்கு பயிரையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம்

ஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.!



அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.

* இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.

* காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

* ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார்.

* உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது.

* ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

* இருந்தாலும் சீன, கொரிய டாக்டர்கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

* படிப்புத் திறனையும், நினைவாற்றலையும் ஜின்செங் அதிகப்படுத்தி இருப்பதை அவர்கள் சோதனைகள் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்கள்.

Tuesday, August 27, 2013

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்




கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.

உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

2. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

4. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

5. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

6. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

9. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

13. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

ஒரு நொடி கோபப்பட்டால் 60 விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.

Marcus Stone, R. A. (1840-1921): Painter and Illustrator


 Frank Stone, whom Dickens affectionately refers to in his correspondence as "Old Tone," died in 1859, Dickens recommended his nineteen-year-old son Marcus to his publishers for commissions for frontispieces for two books in the Cheap Edition (Little Dorrit and A Tale of Two Cities) and for illustrations for three in the Library Edition:Pictures from Italy (1862: four illustrations), American Notes (1862: four illustrations), A Child's History of England (1862: eight illustrations), and Great Expectations (1862: eight illustrations). Marcus Clayton Stone (1840-1921), second son of artist Frank Stone, was virtually Dickens's adopted son after Frank Stone's death in 1859, staying a month each year at Gad's Hill (purchased by Dickens on 14 March 1856), Rochester, with the novelist's family. The other Stone children were Ellen, Arthur Paul, and Lilian Bertha.




































































































































Marcus Stone's love-affair with illustrated Dickens began in 1852, when the twelve-year-old eagerly purchased each number of Bleak House (illustrated by Phiz) as it came out, attempting to sketch of Jo, the crossing-sweeper, in the graveyard scene in Chapter 11. Kitton recounts the story of how, just as the young artist had finished his pencil sketch, the novelist himself entered the room, and remarked to the boy: "Well, now, that is very good. You will have to give that to me" (193). Accordingly, the drawing was sent to Tavistock House; a year later, in return, the boy received an autographed copy of A Child's History of England, dated 19 December 1853, and containing a hand-written note acknowledging the excellence of the young artist's illustration of the weird scene from Bleak House. As a youngster Marcus Stone had one other highly significant connection with the Dickens circle: acting in "The Smallest Theatre in the World" (as Dickens termed the converted schoolroom in Tavistock House). Young Stone, following in his father's theatrical footsteps, played the Captain of the Guard in Dickens's production of Planché's fairy extravaganza Fortunio, and a British naval officer in the first run of the Collins-Dickens collaboration The Frozen Deep.
In 1858, despite his lack of formal training (for which he compensated by observing his father in his studio), Marcus had exhibited "At Rest," depicting an aged knight in armour lying under a tree. Just ten days after Frank Stone's death, on 26 November 1859 Dickens wrote to his publisher, Edward Chapman, recommending that Marcus Stone be given a commission to illustrate a book "should the opportunity arise." On the same day, Dickens wrote a similar, laudatory note to the publisher John Murray, commending a painting recently exhibited by Marcus Stone (likely "Silent Reading," a sentimental narrative painting which shows the dramatic moment when the squire and the village constable discover in a shed on the landowner's property a tramp and child asleep in each other's arms) "as the work of a young man of remarkable power and promise" (Letters 9: 171). Dickens likewise recommended Marcus Stone as an illustrator to publisher Thomas Longman, but neither Longmans nor Murrays ever employed the younger Stone in that capacity.
Dickens, having dismissed Hablot Knight Browne ("Phiz") as his official illustrator after the monthly serialisation ofA Tale of Two Cities in 1859, required a new artist with a contemporary, so-called "Sixties" look (initiated by the artists Millais, Fred Walker, Sandys, and Leighton, all of whom worked for the recently-established illustrated monthly magazineThe Cornhill, edited by W. M. Thackeray) for the monthly numbers of Our Mutual Friend, the first which number of which went on sale on 1 May 1864. Remarks Hammerton of Stone's drawings for the novel: "we are at once conscious of an enormous advance in their artistic quality and the disappearance of the old hearty humour of Phiz and Cruikshank" (19): the Sixties look, though vigorous and lifelike, was much more earnest and somber than the style of the earlier school of Victorian illustration. Among the other works which the younger Stone subsequently illustrated for Chapman and Hall was the Illustrated Library edition of A Tale of Two Cities; logically, the firm should merely have reproduced Phiz's monthly-part illustrations which appeared in the book's first edition, but Dickens seems to have blamed Browne for the poor monthly sales of the novel. Hesketh Pearson reports that, when Great Expectations appeared in volume form, there was general surprise that young Stone rather than the venerable Phiz had been chosen as the illustrator.
Stone's figures are more realistic and involve less caricature than Phiz's, and he engraved the drawing on wood rather than etched on steel plate as Browne had done. For the monthly instalments of Our Mutual Friendyoung Stone designed a monthly wrapper which involved a series of tableaux depicting the story's principal figures and incidents, submitting the sketch to Dickens for his approval. On 23 February 1864 Dickens responded with specific suggestions for improvement: he proposed changes in the lettering, replacing the dustman with Wegg and Boffin, and placing the dustman in the inspector's place, eliminating the murder reward bill entirely. In the monthly plates, Dickens let the artist please himself as to which of Wegg's legs should be artificial, and generally permitted Stone complete freedom in the subjects he chose to illustrate--providing the sketches were always submitted to the novelist for his approval. Perhaps this fact explains why Dickens permitted Stone to caricature so obviously his business agent and friend John Forster as the self-complacent and xenophobic Mr. Podsnap in the dinner party scene (Book 2, Chapter 3), in which Podsnap sits to the right of Veneering. Although the drawings were then engraved by the Brothers Dalziel, they were not always up to the high standards publishers expected of that firm.
Mr. Marcus Stone claims the credit of bringing into repute the now universal [i. e., by 1899] custom of duplicating drawing upon woodblocks by means of photography, his illustrations for Anthony Trollope's story, "He Knew He was Right, being the first thus treated. The adoption of this plan secures the preservation of the original designs, and therefore renders them available for comparison with the engraved reproductions. Mr. Stone, nevertheless, is by no means satisfied with the engraver's treatment of his work, nor is this surprising when we critically examine such deplorable examples of wood-engraving as instanced in the illustrations entitled "The Garden on the Roof" and "Eugene's Bedside." In one of the designs [for Our Mutual Friend], that representing Boffin's Progress," it will be noticed that the wheels on the "off"-side of the Boffin chaise are omitted, an oversight (explains Mr. Stone) for which the engraver is really responsible. [Kitton 200-201]
According to an interview originally published in London's Morning Post and reprinted in The Dickensian 8 (August 1912) 216-217, Marcus Stone asserted that, when illustrating both Great Expectations in the 1862 Library Edition andOur Mutual Friend two years later, he would receive proofs directly from Dickens then choose his own subjects for each instalment. "I then sent them [the drawings] on for his [Dickens's] approval, and i have no recollection that he ever rejected one," reminisced the artist. Stone also recalled that, when he would receive his drawings back from the novelist, each would have a title inscribed underneath, a recollection which (if accurate) suggests that the captions for the plates inOur Mutual Friend represent the author's rather than the artist's intention. However, as Philip Collins in Dickens: Interviews and Recollections (London: Macmillan, 1981) concludes, Stone's aging memory must have blended the circumstances surrounding the illustration of the later novel with those for the former since the text of Great Expectations with which he was working was not monthly proofs at all, but the story as it appeared in All the Year Round (1 December 1860-3 August 1861) and in volume form shortly thereafter.
Paul Schlicke in "Illustrations and Book Illustration" in The Oxford Companion to Dickens is charitable in describing Stone's work on Dickens as "wholly undistinguished" (254) since, despite the solidity of his figures, the young artist often chooses scenes lacking in dramatic possibilities and offers so little of the telling background detail that is characteristic of most of Dickens's chosen illustrators. In the Chapman and Hall Library Edition of 1862, "Stone works within the sentimental-realist tradition of the black-and-white graphic artists of the 1860s" (291). The only one of his eight pictures for Great Expectations that has been frequently reproduced is the frontispiece "With Estella After All," an ingenious title devised by Dickens to complement the solid figure of the very adult lovers as they seem to support one another both physically and emotionally in what must be (despite a total lack of background detail) the ruined garden of Satis House in the ultimate chapter's revised ending. W. A. Fraser (1912) singled this plate out for praise as a fitting companion to Dickens's letter-press. Stone's illustrations for Great Expectations were reprinted in the Charles Dickens Edition, the second Illustrated Library Edition (1873-6, 30 volumes), and the Gadshill Edition (1897-8, 34 volumes). In "Charles Dickens and His Illustrators" (Retrospectus and Prospectus: The Nonesuch Dickens, pp. 9-52), Arthur Waugh points out that Stone's working in the medium of the woodcut rather than the old-fashioned steel engraving is largely responsible for "entirely different appearance" (Worth 48) of his plates for Great Expectations and Our Mutual Friend.
Illustrated programs for the short novel, originally issued in three volumes by Chapman and Hall in 1861 without any plates although accompanied by 27 of New York artist J. McLenan's plates in the American serialisation, were subsequently provided in the nineteenth century by Charles Green, R. I. (volume 22 of the Gadshill Edition), W. A Fraser (28 plates for the 1875 Household Edition), and F. W. Pailthorpe (21 etchings for a special edition of illustrations keyed to the volume and page numbers of the 1861 Chapman and Hall edition, but published by Robson and Kerslake in 1885). What separates Stone's illustrations from those of the later artists is not talent but Dickens's involvement in the designs. Jane Rabb Cohen (1980) refers to Stone's eight Great Expectations plates as his first major commission (204). Despite his youth, Chapman and Hall first recruited Stone at the insistence of Dickens himself to provide a frontispiece for the Cheap Edition of Little Dorrit. Although, according to Cohen, as a result of Dickens's having procured for him numerous commissions, Marcus Stone had acquired sufficient commercial experience by the age of 24, and had become fairly "familiar with the wood techniques that were so popular with the new artists of the 1860's" [204]) when he subsequently supplied those same publishers with illustrations for the 1862 Library Edition of American Notes Pictures from Italy, andA Child's History of England.
In Dickens and His Illustrators (London: 1899), F. G. Kitton refers to Luke Fildes and Marcus Stone not as artistic neophytes but as "popular Royal Academicians" (ix), suggesting that by the end of the century their work was held in high regard. Kitton merely mentions Stone's Great Expectations plates as being part of a series of seven sets the younger Stone executed, the last of these being the Frontispiece for the First Cheap Edition of A Tale of Two Cities (1864). Kitton alone out of all critics of illustrations for Dickens has pronounced Stone's work as "characterized by the very essential quality of always telling their story" (202).
In another piece entitled "Dickens and His Illustrators" (this appearing in Charles Dickens 1812-1870: A Centenary Volume, edited by E. W. F. Tomlin), modern art critic Nicolas Bentley is not nearly so charitable:
The defense of youth as an excuse for Stone's inadequacy would be easier to sustain--he was twenty-four when he illustrated Our Mutual Friend--were it not that the talents of Millais, Holman Hunt, Richard Doyle, Keene and others were considerably more precocious than his own. The fact is that whatever other talents he may have developed--later in life he achieved some degree of fame and fortune as a painter of maudlin pot-boilers with a Regency flavour--as an illustrator he was no better than a hack. [Bentley 224]
After working for such illustrated magazines as The Cornhill, by the time that Dickens was publishing The Mystery of Edwin Drood, Marcus Stone had given up book illustration and, like his father, became an accomplished painter whose works were in demand, and therefore commanded high prices. Although both father and son exhibited their paintings at the Royal Academy, the elder Stone was merely an Associate of the Royal Academy whereas Marcus's superiority in painting earned him the full status of an R. A. in 1887 after being elected to Associate status ten years earlier Especially noteworthy are Marcus Stone's illustrations of moments from Shakespeare's plays:
1. 1861: "Claudio, Deceived by Don John, Accuses Hero" Act IV, Scene i, of Much Ado About Nothing (oil sketch for a larger study exhibited at the Royal Academy).
2. 1874: "Lear and Cordelia" (engraved by W. Ridgway for The Art Journal, 36: 244).
3. 1888: "Ophelia" (part of an exhibition of twenty-one paintings sponsored by the weekly journal theGraphic in a series of pictures called "Shakespeare's Heroines").

Related Materials

References

Bentley, Nicolas. "Dickens and His Illustrators." Charles Dickens 1812-1870: A Centenary Volume. Ed. E. W. F. Tomlin. London: Weidenfeld and Nicolson; New York: Simon and Shuster, 1969. Pp. 205-227.
Cohen, Jane R. "Frank Stone." Chapter 13 in Charles Dickens and His Original Illustrators. Columbus: Ohio State University Press, 1980. Pp. 203-209.
David Purdue's "Dickens Page: Illustrations." http://www.fidnet.com/~dap1955/dickens/illustrations.html
Fraser, W. A. "The Illustrations of Dickens: IV: Marcus Stone, R. A." Dickensian 2 (October 1906): 263-6.
Hammerton, J. A. The Dickens Picture-Book. London: Educational Book, 1910.
Kaplan, Fred. Dickens: A Biography. New York: William Morrow, 1988.
Kitton, Frederic G. Dickens and His Illustrators. London: George Redway, 1899. Amsterdam: S. Emmering, 1972.
The Letters of Charles Dickens. General editors Madeline House, Graham Storey, and Kathleen Tillotson. Vol. 9 (1859-1861), ed. Madeline House, Graham Storey, and Kathleen Tillotson. Oxford: Clarendon, 1997.
"Mr. Marcus Stone, R. A., and Charles Dickens." Dickensian 8 (August 1912): 216-217.
Pearson, Hesketh. Dickens. 1949. London: Cassell, 1988.
"Shakespeare Illustrated." http://www.emory.edu/ENGLISH/classes/Shakespeare_Illustrated/Stone.html
Historical genre painter and illustrator. Son and pupil of Frank Stone (ARA, 1800-1859). Exhibited at the Royal Academy from 1858 and elsewhere. Became an Associate of the Royal Academy (ARA) in 1876, and a full member (RA) in 1886. Mainly painted genre scenes set in the 18th century or Empire costume. The themes are usually dramatic, sentimental, or sometimes humorous. RA titles: 'Rejected', 'The First Love Letter', 'A Stolen Kiss', etc. 'Il y a Toujours un Autre' (RA 1882) ('There is always another') was bought by the Chantrey Bequest for £800. In his own day Stone's pictures were much admired and fetched high prices. He illustrated Our Mutual Friend for Dickens and worked for Cornhill Magazine. Works by him are in many English museums. 
Source: 'Victorian Painters', Christopher Wood.