Search This Blog

Thursday, June 7, 2012

தெரிந்து கொள்வோம் வாங்க!


 
* பன்னீர்ப் பூ இரவில் மலரும். 

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர். 
* இரு குரங்கின் கை எனப்படுவது முசுமுசுக்கை. 
* உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள். 
* உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ùஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம். 

*உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கூடம் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள சிட்டி மாண்டிசேரி பள்ளிதான் உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில், சுமார் 22,612 மாணவர்கள் பயில்கின்றனர். 


*ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன.

 
* பெயர்கள் பற்றிய படிப்புக்கு ஓனோமாஸ்டிக் என்று பெயர். 

* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி. 


* தங்கம் அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் நாடு தென்னாப்ரிக்கா. 


* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம். 


* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும். 
* சிலந்திப் பூச்சிகளில் குண்டு வீசும் வண்டு என்ற ஒரு வகை வண்டு உண்டு. இவ்வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி உண்டு. இந்தச் சுரப்பியில் உள்ள ஒரு வகை திரவமும் வெடிக்கம் தன்மை கொண்டது. அதனால் இதற்கு இப்பெயர் வந்தது. 

* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 
* நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா ஆகும். 

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது. 
* உராங் உடான் என்ற குரங்கினத்தை "கானகத்தில் கிழவன்' என்று மலேசிய மக்கள் அழைக்கின்றனர். 
* ஒரே கவிஞர் இரு நாடுகளுக்குத் தேசிய கீதம் எழுதிய பெருமையைப் பெற்றவர் ரவீந்தரநாத் தாகூர். இவர் இந்தியா மற்றும் வங்கதேசத் தேசிய கீதங்களை எழுதியுள்ளார். 
* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும். 

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும். 
* பாரி, ஆய் அண்டிரான், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் ஆவர். 
* தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாமல் இருப்பது போலவே, திருக்கோட்டியூர் மாதவன் கோயில் கோபுரத்தின் நிழலும் கீழே விழுவதில்லை. 

* கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ளது. 
* சீதையின் தந்தை பெயர் ஜனகர். தாயின் பெயர் சுநயனீ. 
* துப்பாக்கியை ஏமப்பூட்டு, துமிக்கி என்றும், பீரங்கியை குண்டு குழாய் என்றும், ரிவால்வரை சுழலி என்றும் அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டி அழைத்தவர் தேவநேயப் பாவாணர். 


Join Only-for-tamil


மாமிசம் உண்ணும் தாவரம் இந்த பிட்சர் தாவரம். சிறு பூச்சிகளைப் பிடித்து தின்னும். இந்தத் தாவரம் ஆசியாவில் உள்ளது. பிட்சர் தாவரத்தின் இலைகள் ஜாடி போல் வளைந்து காணப்படும். இது மிகவும் இனிப்பான சாறு ஒன்றை சுரக்கும். இந்தச் சுவை மிகுந்த சாறை குடிக்கச் செல்லும் பூச்சிகள், இந்த ஜாடிக்குள் மாட்டிக் கொள்ளும். ஜாடியின் அடியில் ஜீரணம் செய்யும் அமிலங்கள் சுரக்கும். அங்கே அப்படியே இந்தப் பூவினால் விழுங்கப்பட்டு விடும் பூச்சிகள். அய்யோ பாவம்!

அன்புடன்
முரளி

No comments:

Post a Comment