Search This Blog

Thursday, June 7, 2012

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார்கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும்.
ஆகவே கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள்.
இதற்கு காரணம் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகி விடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.
2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.
3. சொக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சொக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சொக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.
4. ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகியவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் பி12 நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்.
5. ஐஸ்கிரீமில் உடலுக்கு தேவையான புரோட்டீன் இருக்கிறது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத் திசுவை தினமும் சரிசெய்ய தேவைப்படுகிறது.
6. சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண்டீர்களா, ஐஸ்கிரீமை சாப்பிடலாம்.
ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment