Search This Blog

Wednesday, May 30, 2012

சின்னஞ்சிறு கவிதைகள்



சுடும் நாக்கு

எரியும் வார்த்தை

கருகும் மனசு


@@@@@@@@@@@@@@@@@@


சுடும் வெயில்

அமைதியான வானம்

குளத்தில் மீன்கள்



@@@@@@@@@@@@@@@@@

தோழியே

தோழியாய் மட்டும் இரு

நட்பாவது

வாழ்ந்துவிட்டுப் போகட்டும்


@@@@@@@@@@@@@@@@@



துப்பட்டாவை

தேசிய சின்னமாக்குங்கள்

கவிஞன் பிறக்கிறான்


@@@@@@@@@@@@@@@@@



நீல வானத்து நிலவாய்

சிரிக்குதடி உன் முகம்

மனசுக்குள்


@@@@@@@@@@@@@@@@@




மெட்டுக்குப் பாட்டு

தனிமையில்
 
கவிதை


@@@@@@@@@@@@@@@@@



நினைத்தேன்

தவித்தேன்

துடித்தேன்


மலைத்தேன்

மகிழ்ந்தேன்

உயிர்த்தேன்


சொல்தேன்

தமிழ்த்தேன்

அரும்தேன்


நின்தேன்

சுவைத்தேன்

தொலைந்தேன்


@@@@@@@@@@@@@@@


அடுக்குமாடி வீட்டு நிழல்

நம்பிக்கைகளை

கான்கிரீட் சுவருக்குள் புதைத்து

நாளையப் பொழுதை விரட்டியடிக்கிறது


கையறுநிலையும் து((தூ)க்கமும்

தலைவிரித்தாடுகிறது விலைவாசியைப்போல்

நம் சமூகத்தில்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




எனக்குள் நுழைந்தாய்

சுவாசமானாய்

நான் கவிஞனானேன்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



அட்டையாய் உறிஞ்சுகிறது

மாற்று மொழியாய் ஒன்று

வாழும் மொழி தமிழென

ஊமை சமூகம்



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நீலமாய் விரியும் வானம்
நீங்கா நினைவுடன்
நீ

ஆழமாய் போகும் கடவுள்

வாக்கு சுத்த கடவுள்களை
நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்

ஒரே ஒரு மனிதனை
மட்டும்
என்னிடம் கொடுங்கள்

இங்கு எல்லாம் புனிதமாகும் 

நான் பறந்துகொண்டிருக்கிறேன்

என்
மனசெல்லாம் சிறகுகள்

thanks http://segarkavithan.blogspot.com/ 











No comments:

Post a Comment