Search This Blog

Tuesday, May 29, 2012

பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள்




குடும்பம், குழந்தைகள் என நாள் முழுவதும் வேலை வேலை என பம்பரமாய் சுழன்று களைத்த பெண்களுக்கு ஆதரவாக, கொஞ்சம் ஆறுதலாக பேசுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
பெண்களின் உடலும் ரத்தமும் சதையால் ஆனது தான், அவர்களையும் நோய்கள் தாக்கும்.
அந்த நோய்களின் தீவிரத்தால் மன அழுத்தம் வரும், அந்த நேரத்தில் அவர்களை சரியாக கவனித்தாலே போதும், பெண்களுக்கு ஏற்பட்ட நோய்கள் எல்லாம் உடனடியாக குணமடையும். பெண்களும் தங்களின் உடல் நலத்தில் சரியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மகளிர் மருத்துவர்கள்.
பெண்களுக்கு எலும்பு உடைதல் நோய், கருப்பை, மார்பக புற்றுநோய், இதயநோய், மன அழுத்தம், கருமுட்டை குறைபாடு ஆகிய ஆபத்தான ஐந்து நோய்கள் தாக்குகின்றன. இந்த நோய்களில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்வது என்று ஆலோசனை அளித்துள்ளனர் மகளிர் மருத்துவர்கள்.
எலும்பு உடைதல் நோய்: பெண்கள் இயற்கையிலேயே மென்மையானவர்கள். நாற்பது வயதை கடந்த உடனே அவர்களின் உடலும், எலும்பும் நாளடைவில் மெலிவடைந்து விடும்.
இதனால் லேசாக கீழே விழுந்தாலோ எழும்புகள் உடைந்து விடும். எனவே உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பு பாதிப்பு நோய் ஏற்பட்டவர்கள் லேசாக எலும்பு பாதிப்பு ஏற்பட்டலே அப்புறம் நீண்டகாலத்திற்கு வீல் சேரை தேட வேண்டியிருக்கும். எனவே பெண்களே உங்கள் எலும்புகளின் மீது நீங்கள் அக்கறை கொள்ளுங்கள்.
இதய நோய்: கடந்த பத்து ஆண்டுகளில் இதயநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் பெரும்பாலான பெண்களின் உடல் பருமனாகிறது. இதனால் உயர்ரத்த அழுத்தம், இதயபாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே பெண்களே சரியான உணவுகளை உட்கொண்டு இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
மன அழுத்தம் கவனிங்க: மன அழுத்தம் என்பது பெண்களை பாதிக்கும் மிகப்பெரிய நோயாக உள்ளது. நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் பிரச்சினை, ஹார்மோன் மாறுதல் போன்றவைகளினால் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே மெனோபாஸ் பருவத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்களேன். உங்களுக்கான மன அழுத்தப் பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
புற்றுநோய் தாக்குதல்: இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். இருபதோ, நாற்பதோ எந்த வயது பெண்களாக இருந்தாலும் தினசரி 5 நிமிடம் செலவழித்து தங்கள் மார்புகளை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அதேபோல் 35 வயதை கடந்த பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறை முழு உடல் பரிசோனை செய்து கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டிற்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
கருமுட்டை உற்பத்தி: முறையற்ற மாதவிடாய் கோளாறுகள் இன்றைக்கு இளம் வயது பெண்களையும் தாக்குகின்றன. இதற்கு காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம் தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
முறையற்ற மாதவிடாய் கோளாறுகளால் கருமுட்டை உற்பத்தியில் குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதனால் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை உருவாவதில் பிரச்சினைகள் எழும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. எனவே இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க சத்தான சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment