Search This Blog

Saturday, January 14, 2012

ஏனென்றால்?


Join Only-for-tamil
நான் ஓவியங்களை விடவும்
தூரிகையை ரசிக்கின்றேன்;
ஏனென்றால்?
அவை ஓவியத்தின்முகவரியில்
தன்னைத் தொலைத்துவிடுவதால்

Join Only-for-tamil
நான் மலர்களை விடவும்
காம்புகளை ரசிக்கின்றேன்;
ஏனென்றால்?
அவை மலர்களைமுன்நிறுத்தி
தன்னை மறைத்துக் கொள்வதால்

Join Only-for-tamil
நான் வெற்றிகளைக் காட்டிலும்
தோல்விகளை ரசிக்கின்றேன்;
ஏனென்றால்?
அவற்றில் முற்றிவிடும்
தலைக்கனம்ஏதுமில்லை என்பதால்.

Join Only-for-tamil
நான் இளமையை விடவும்
முதுமையை ரசிக்கின்றேன்;
ஏனென்றால்?
அதனிடம் இழப்பதற்கு ஏதுமில்லை என்பதால்

Join Only-for-tamil
பற்றுக்கள் அறும்வேளை
பாரங்கள் குறைகிறது
பாரங்கள் விடும்வேளை
பறப்பது சுகமாகிறது

- த. செந்தில் குமார்-

Dr .தமிழ்-

No comments:

Post a Comment