Search This Blog

Wednesday, September 28, 2011

சிந்திச்சுப் பாத்து செய்கையை மாத்து... Lovely Tamil Jokes




================================== 
புதிதாக மணமான‌ கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று.

30 ஆண்டுகள் உருண்டோடின..

ஒருநாள் மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3 புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன.

ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்..

" அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.."

" பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?"

" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!" 
==========================================
மார்க்கெட்டிலிருந்து வீட்டுக்கு காய்கறி வாங்கிப்போகும் ஒருவர் வெண்டைக்காய்களை உடைத்துப் பார்த்து முற்றலாக இருந்தால் கீழே போட்டுவிட்டு சென்றார்.. எதிரில் வந்த நண்பர் ஆச்சர்யம் தாங்காமல் ஏனென்று கேட்டார்..

என்ன சார் பண்றது..? உடைச்சு பார்த்து வாங்கினா கடைக்காரன் திட்டறான்.. உடைக்காம வாங்கினா வீட்டுக்காரி திட்டுறா..!
==========================================

 சின்னா ஆசிரியர்கள் ஓய்வறை வழியாகப் போனபோது ஒரு ஆசிரியர் கூப்பிட்டார்..

சின்னா, எனக்கொரு டீ வாங்கி வா..

மற்றொருவர் " எனக்கும்.. க்ளாஸை நல்லா கழுவிட்டு டீ போட்டு வாங்கிட்டு வா.."

சின்னா 2 தேனீர் குவளைகளுடன் திரும்பினான்..

" யார் சார் கழுவின க்ளாஸ்லே டீ கேட்டது.. இந்தாங்க...!"

==========================================
வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு

" பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்கூடாது.." என்று சொல்லிப் போனார்.  

ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர் அகற்றும் போது பாட்டி கேட்டாள்..  

டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?  

ஓ.எஸ்.. தாராளமா..  

நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு..!!!  
===================================================

பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக 2 கோப்பைகளுடன் திரும்பிய மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான்..  

சின்ன கோப்பை எதுக்கு கிடைச்சது..?  

கர்நாடக சங்கீதம் பாடினதுக்கு..  

பெருசு எதுக்கு குடுத்தாங்க..?  

பாட்டை நிறுத்தச் சொல்லி...!!!
======================================= 
 http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQbLInemFKWrAkAWNC2sq2uwDN2nevuLLJ9xDoo8QHjj2C_5HUs
மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். “”பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்” என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.

கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: “நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது"  
அதற்கு தவான், “உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

இதில இருந்து என்ன தெரிஞ்சுக்கிறீங்க?  

மனுஷனுக்கு புறத் தோற்றம் முக்கியமில்லைனா? இல்லீங்கண்ணா .... 
சாதிக்கணும் , சாதிச்ச மனுஷனுக்கு ஆடை ஒரு பெரிய விஷயமா கிடையாது.. அது வரைக்கும் , நீங்க நீட்டா  டிரஸ் பண்ணுங்க, நச்சுன்னு! அதே நேரத்தில, இலக்கு முக்கியம்.. அது ரொம்ப பெருசா இருக்கட்டும்..!

மனசை எப்போவும் வாட விடாதீங்க.. மலர்ச்சி இருந்துக்கிட்டே இருக்கட்டும்.. நாம எல்லாம் சாதிக்கப் பிறந்து இருக்கோம் , ஏதோ வந்தோம் போனோம்னு இருக்க வேண்டாம்..!


Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_3713.html#ixzz1ZDexb7tz

No comments:

Post a Comment