Search This Blog

Tuesday, August 2, 2011

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்



சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவைஉடல் முழுவதும் தோன்றுவதாகும்.உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும்நோய்உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறிஅவை ஒவ்வொன்றிலும் தோன்றக்கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. 
தலை.................................... 307
2. 
வாய்.................................... ..18
3. 
மூக்கு.................................... 27
4. 
காது...................................... 56
5. 
கண்....................................... 96
6. 
பிடரி..................................... 10
7. 
கன்னம்................................. 32
8. 
கண்டம்.................................. 6
9. 
உந்தி................................... 108
10. 
கைகடம்............................ 130
11. 
குதம்.................................. 101
12. 
தொடை............................... 91
13. 
முழங்கால் கெண்டை......... 47
14. 
இடை................................. 105
15. 
இதயம்............................... 106
16. 
முதுகு................................. 52
17. 
உள்ளங்கால்....................... 31
18. 
புறங்கால்............................ 25
19. 
உடல்உறுப்பு எங்கும்....... 
3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின்எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பதுசித்த மருத்துவத்தின் தொன்மைவளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம். உலக மருத்துவம்இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவைகுடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும்கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவைபூ நாகம்தட்டைப்புழுகொக்கிப்புழு,சன்னப்புழுவெள்ளைப் புழுசெம்பைப் புழுகீரைப்புழுகர்ப்பப் புழுதிமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும்சிறுநீர்இரத்தம்விந்துசீழ்சளி,வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டுஅதன் விளைவாகநோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை,உடல் நிறம் மாறும். சுரம்வயிற்றுவலிமார்பு நோய்வெளுப்பு நோய்ஊதல் நோய்,இருமல்வாந்திசயநோய்அருசிஅசீரணம்பேதிவாய் நீரூறல்பிரேமைசூலை,தொப்புள் சுற்றி வலிவயிறு உப்பல்தூக்கத்தில் பல் கடித்தல்மாலைக்கண்,குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணைகுழந்தை இசிவுமூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணிபவுத்திரம்மூலம்மலக்கட்டுதேகக் காங்கைசுரம்,மயிர் உதிர்தல்குட்டம்சொறி சிரங்குபடைகரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்றுகிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்புவிரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள் உருவாகக் காரணம்
கரப்பான்கிராணிபவுத்திரம்மூலம்மலக்கட்டுதேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால்அவைஉடலின் சூட்டினாலேயே உருவானவைஎனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகிஅச்சூடுகொழுப்புதசை யாவற்றையும் தாக்கிகிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள்உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயைஉண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்துகட்டுண்டாக்கித்துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள்,உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம்வெடிப்புண்,சொறிகரப்பான்கிராணி,பவுத்திரம்சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம்சீழ்நீர்க் கசிவுமுளைமூலம்வயிறு பொருமல்வாய்வுபுழுக்கடிசோகைகுன்மம்சயநோய்மலடுபெருவயிறுசுக்கில நட்டம்உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளதுநோய்வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும்உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும்நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
கண் நோய் :
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப்போலவேதமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாகவளர்த்தனர் எனலாம்.
பொதுக் காரணங்கள் :
வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும்வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும்புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும்அதனால் மெய்யிலும்உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும்உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும்மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.
அவை : சுவாசம்விக்கல்தும்மல்இருமல்கொட்டாவிபசிதாகம்சிறுநீர்மலம்,இளைப்புகண்ணீர்விந்துதூக்கம்கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.
சிறப்புக் காரணம் :
சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதுதாயின் வயிற்றில் கிருமிகள்சேர்ந்திருந்தாலும்தாயானவள் பசியால் வருந்தினாலும்தாயானவள்திகிலடைந்தாலும்மாங்காய்மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசுபிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

கண்ணில் உண்டாகும் காசநோய் :
கண்ணில் உண்டாகும் காசநோய்நீலகாசம்பித்தகாசம்வாதகாசம்வாலகாசம்,மந்தாரகாசம்ஐயகாசம்வலியுங்காசம்விரணகாசம் என எட்டாகும்.
வெள்ளெழுத்து
கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து,மந்தாரம்மூளை வரட்சிபித்தம்சேற்பம்நீர் வாயுமேகம் என்பன.
முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும்.நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும்தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும்,மேகக் கூட்டம் போலவும்பார்வை தடைப்பட்டுநேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும்பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன்பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.
கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும்குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.
தலைநோய் :
உடம்பு எண் சாண் அளவுஅவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில்தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம்தலையின்உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய்மூக்குகாதுகண்பிடரிகன்னம்,கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது.ஆனால்தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும்,ஆய்வும் புலப்படும். மேலும்அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. 
தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத்தருகின்றபோதுதலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்)பதினாறுகாதில் நூறுநாசியில் எண்பத்தாறுஅலகில் முப்பத்தாறுகன்னத்தில் நாற்பத் தொன்பதுஈறில் முப்பத்தேழுபல்லில் நாற்பத்தைந்துநாக்கில் முப்பது நான்கு,உண்ணாக்கில் இருபதுஇதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறுகண்டத்தில் நூறு,பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறுகழுத்தில் முப்பத்தாறுஎனதாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால்எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.
கபால நோயின் வகை :
வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1,கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3,கபால தோடம்ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.
தலையில் தோன்றும் நோய்களில் கண்காதுதொண்டைமூக்குஆகியவையும்அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும்காதுதொண்டை,மூக்கு ஆகியவை தனியாகவும்மூளை மருத்துவம் தனியாகவும்சிறப்புமருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும்ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவேகருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயேஅறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில்உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.
அம்மை நோய் :
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம்குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனைவெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.
மேலும்அம்மை நோய்க்குக் குரு நோய்போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. அம்மைநோய்உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகிமூளை கொதிப்படைந்துஎலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.
இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது. அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. 
பனை முகரி 2. பாலம்மை 3. மிளகம்மை 4. வரகுதரியம்மை 5. கல்லுதரியம்மை 6.உப்புதரியம்மை
7. 
கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை 9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை 11.கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை 13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை
என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும்அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

No comments:

Post a Comment