Search This Blog

Monday, August 29, 2011

உலகத்தை உணர முடியுமா?




  • தவறு செய்தல் மனித குணம், மன்னித்தல் தேவகுணம். - போப்

  • உலகிலேயே பெரிய சுமை மூடநம்பிக்கையே. - மல்டன்

  • அளவு கடந்த ஆசை, அளவற்ற துவேசமாக மாறுகிறது. -சாக்ரடீஸ்

  • மனசாட்சி செய்யும் சித்திரவதையே ஆன்மாவின் நரகம். - கார்லைல்

  • வாழ்நாளைப் பெருக்க உணவைச் சுருக்கு. -பெஞ்சமின்

  • இதயக்குமுறலை மூழ்கடிக்கும் கலை இதமான சிரிப்பு. -ஹார்ட்லி

  • சந்தேகத் திரையை கேள்விகளால் கிழித்தெறிய வேண்டும். -காப்பர்

  • சிரமப்பட்டுப் பெறுவதே நீண்ட காலம் நீடித்து நிற்கும் -சார்லஸ் கேப்டன்.

  • மகத்தான காரியங்களைச் செய். நீண்டகாலம் அது பற்றி கனவு காணாதே. -சார்லஸ் கிங்ஸ்லி

  • வேலையும் ஓய்வும் மருத்துவர் கதவை மூடுகிறது. -புல்லெர்

  • தொல்லைகளை எளிதாக்குகிறது பொறுமை. -தாம்சன்.

  • கவிஞர்கள் கஷ்டத்தில் கற்றதைக் கவிதையில் போதிக்கிறார்கள். -ஷெல்லி

  • செல்வத்தை உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது. -பெர்னாட்ஷா

  • உடல்நலமே எல்லா உரிமைகளிலும் மேலானது. -அமியல்

  • உன்னால் முடிந்தவரை உன் பணியினை இனி நன்றாய் செய். -நியூட்டன்

  • நாணயத்தை இழந்தவன் இழப்பதற்கு வேறொன்றும் இல்லாதவன். -விலி

  • செயல் புரிபவர் அனைவரும் சிந்திப்பவர்களின் அடிமையே. -ஹின்

  • துன்பத்தை அனுபவித்தால் அறிவு வளரும். -ப்ரவுனிங்

  • ஒற்றுமையின் விளக்கமாகி விடுங்கள். அன்பின் நாக்காகி விடுங்கள். -லாங்பெல்லோ

  • குழந்தைப் பருவம் பகுத்தறிவின் உறக்க நிலை. -ரூஷோ

  • ஆழ்ந்த சிந்தனைக்கு அதிக பலன் உண்டு. -ஆல்பர்ட்

  • ஒரு பிழையை நீ திருத்த மறுக்கும் போதுதான் அது தவறாகிறது. -ஆர்லாண்டோ

  • கூலி கொடுப்பவனை ஊனமாக்கி கூலி வாங்குபவனுக்கு உதவமுடியாது. -லிங்கன்

  • கனவின் லட்சியம் மனிதனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து வைப்பதுதான். -ப்ராய்டு.

  • பல அறிஞர்களுடன் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். -எபிக்டெட்ஸ்

  • இளமை என்னும் பக்குவமான வயதில்தான் எவ்வித பண்பும் உருப்பெறுகிறது. -இங்கர்சால்

  • பொதுப்பணியில் நாணயமும் நேர்மையும் வேண்டும். -நேரு

  • கண்ணால் காணப்படும் உலகம் வேறு. அறிவால் உணரப்படும் உலகம் வேறு. -பிளாட்டோ

  • நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காணும் கனவு. -பிளினி

  • எவ்வித தியாகமும் செய்யாமல் எவ்வித நன்மையும் பெறமுடியாது. -ஹெல்ப்ஸ்

தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.

No comments:

Post a Comment