Search This Blog

Thursday, July 28, 2011

எங்கே போகிறது மனிதம்?


 
images2.jpg
கண்முன்னே கொலை நடந்தாலும்
தட்டிக் கேட்க முடியாத அல்லது
மனமில்லாத மனிதம்

நமக்கென்ன ஆனது என்ற எண்ணமோ
தலையிட்டால் தனக்கும் கொலைதான்  
என்ற அச்சமோ தடுக்க வாய் மூடி 
அநியாயத்தை கடந்து செல்லும் மனிதம்

அண்டை வீட்டிலே இடி  விழுந்தாலும்
நம் வீட்டுக்கு வராதவரை நன்மை 
என்றே நினைக்கும்  மனிதம்

பெண் என்றால் போதும் என
பச்சிளம் குழந்தையை கூட பலியாக்கும் 
காம வெறி கொண்ட மனிதம் 

உயிரற்ற பொருட்களை கொள்ளை அடிக்க
உயிரை விலையாய் பிடுங்கும் மனிதம்.

வறியவனை ஏய்த்து பிடுங்கும்
வலியவனின் மனிதம்

எங்கே போகிறது மனிதம்?
ஒருவரை ஒருவர் கொன்று தின்னும் 
காலமும் வந்து விடுமோ?

என்றும் அன்புடன் 
ஸ்ரீ
Join Only-for-tamil

No comments:

Post a Comment