Search This Blog

Thursday, July 28, 2011

திருமணத்தடையை நீக்கிய ஓம்சிவசிவஓம் நாம ஜெபம்

!



சுமார் 16 ஆண்டுகளாக வரன் பார்த்து சலித்துப்போய் விட்டதால்,அந்த கன்னிப்பெண்ணின் வீட்டில் வருத்தப்படாத நாளே இல்லை;நமது தலைவிதி அவ்வளவுதான் என முடிவு செய்திருந்த வேளையில் எனது நண்பரும்,ஆன்மீகக்கடல் வாசகருமாகிய ஒருவர்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மகிமையையும்,ஜபிக்கும் விதத்தையும்,1,00,000 முறை ஜபிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் விவரித்திருக்கிறார்.

சில நாட்கள் சிந்தித்த அந்த கன்னிப்பெண்,ஒரு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தாள்.மஞ்சள் நிற விரிப்பு,மூன்று ருத்ராட்சங்கள் வாங்கிக்கொண்டார்.தினமும் காலை 4 மணி முதல் காலை 7 மணி வரையிலும்,இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தார்.கூடவே, தனது ஜப எண்ணிக்கையையும் குறித்துக்கொண்டு வந்திருக்கிறார்.வெறும் 14 நாட்களில் அந்த கன்னியின் ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கை 1,00,008 ஐக் கடந்துவிட்டது.

15 ஆம் நாள் அதிகாலையில் அந்த கன்னிப்பெண்ணின் வீட்டுவாசலில் ஒரு சிகப்பு நிற பசுவும்,ஒரு வெள்ளை நிறப்பசுவும் வந்து தலையை ஆட்டிக்கொண்டே இருந்ததாம்.அதன் கழுத்துகளில் இருந்த மணிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க,ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டிருந்த அந்த கன்னி,வீட்டுக்கு வெளியே வந்து அந்த பசுக்களை விரட்டியும் அவை போகவில்லை;சுமார் ஒரு மணிநேரம் கழித்தப்பின்னரே,அவை தாமாக புறப்பட்டுச்சென்றன.

16 ஆம் நாள் அந்த கன்னிக்கு திருமணம் நிச்சயமானது.இன்று அந்த கன்னி செல்வச்செழிப்பான,அன்பான கணவனை அடைந்திருக்கிறாள்.மணமாகும்போது அந்தக் கன்னியின் வயது 37!

இறைத்தொண்டில், 

அன்பன் . கே. வீரமுனி 
ஓம்சிவசிவஓம்


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_2418.html#ixzz1TNG9FMUR

No comments:

Post a Comment