Search This Blog

Tuesday, July 5, 2011

அற்புத பலன்கள் அள்ளித் தரும் - பைரவரை வணங்கும் சூட்சும ரகசியம்


அற்புத பலன்கள் அள்ளித் தரும் - பைரவரை வணங்கும் சூட்சும ரகசியம்

 சிவனின் சொரூபங்களில் - சரபேசரும்,  பைரவரும் - உங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவர். வழிபடும் நேரமும், வழிபடும் முறையிலும்தான் மொத்த சூட்சுமமும் அடங்கி இருக்கிறது. இது அனைத்து தேவதை வழிபாட்டுக்கும் பொருந்தும். எனக்கு மின்னஞ்சலில் வந்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இதன் மூலம் , தங்கள் கோரிக்கைகள் விரைவிலேயே நிறைவேறும். முயற்சி செய்து  பாருங்களேன்!    

தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ஜீவநாடித்தொடர் கட்டுரையை எழுதி வந்த தெய்வத்திரு. அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாசன் அவர்களின் முழுமையான ஆசிகளுடன் அகத்தியர் ஜீவநாடியின் வழிகாட்டுதலின்படி எங்களுக்கு இறைத்திருவருளால் கிடைத்த போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக - அனைத்து கர்மாக்களை விலக்கும் பைரவர் ஆசி பெற போகர் அருளிய தீபம் ஏற்றும் தெய்வீக திரவியப்பொடி, 27 நட்சத்திரங்களுக்கும்   உரிய பைரவர் திருநாமம் மற்றும் பைரவர் ஸ்தலங்கள், பைரவ தீபப் பொடியின் செய்முறை, பலன்கள் பின்வருமாறு

வ. எண்நட்சத்திரங்கள்பைரவர்அருள்தரும் தலம்
1.அசுவினிஞானபைரவர்பேரூர்
2.பரணிமகாபைரவர்பெரிச்சியூர்
3.கார்த்திகைஅண்ணாமலை பைரவர்திருவண்ணாமலை
4.ரோகிணிபிரம்ம சிரகண்டீஸ்வரர்திருக்கண்டியூர்
5.மிருகசிரிஷம்க்ஷேத்திரபாலர்க்ஷேத்ரபாலபுரம்
6.திருவாதிரைவடுக பைரவர்வடுகூர்
7.புனர்பூசம்விஜய பைரவர்பழனி
8.பூசம்ஆஸின பைரவர்ஸ்ரீவாஞ்சியம்
9.ஆயில்யம்பாதாள பைரவர்காளஹஸ்தி
10.மகம்நர்த்தன பைரவர்வேலூர்
11.பூரம்பைரவர்பட்டீஸ்வரம்
12.உத்திரம்ஜடாமண்டல பைரவர்சேரன்மகாதேவி
13.அஸ்தம்யோகாசன பைரவர்திருப்பத்தூர்
14.சித்திரைசக்கரபைரவர்தர்மபுரி
15.சுவாதிஜடாமுனி பைரவர்பொற்பனைக்கோட்டை
16.விசாகம்கோட்டை பைரவர்திருமயம்
17.அனுஷம்சொர்ண பைரவர்சிதம்பரம்
18.கேட்டைகதாயுத பைரவர்சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19.மூலம்சட்டைநாதர்சீர்காழி
20.பூராடம்வீரபைரவர்அவிநாசி, ஒழுகமங்கலம்
21.உத்திராடம்முத்தலைவேல் வடுகர்கரூர்
22.அவிட்டம்பலிபீடமூர்த்திசீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23.திருவோணம்மார்த்தாண்ட பைரவர்வயிரவன் பட்டி
24.சதயம்சர்ப்ப பைரவர்சங்கரன்கோவில்
25.பூரட்டாதிஅஷ்டபுஜபைரவர்கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26.உத்திரட்டாதிவெண்கலஓசை பைரவர்சேஞ்ஞலூர்
27.ரேவதிசம்ஹார பைரவர்தாத்தையாங்கார்பேட்டை   

மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.

செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.

மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:

பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள எண்ணில் தொடர்பு கொண்டு, இந்த மூலிகைப் பொடி சம்பந்தமான மேலும் தகவல்களை  பெறலாம்.

ஸ்ரீ ஜெயதுர்கா நெய் ஸ்டோர்
எண். 54, பரிபூரண விநாயகர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை – 4. செல் : 98841 1534


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_04.html#ixzz1RCM9OkgZ

No comments:

Post a Comment