Search This Blog

Wednesday, July 13, 2011

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு-சிகாகோ மாநாடு- செப்டம்பர்,11,1893 -பாகம் 1.




 


சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு தமிழாக்கம் வரவேற்புக்கு மறு மொழி.  செப்டம்பர், 11 ,  1893 
அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே !!!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கின்றேன்.என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லைஉலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியரின் பரம்பரை பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகின்றேன்பல்வேறு இனங்களையும்பிரிவுகளையும் சார்ந்த இந்து பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகின்றேன்.  இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றி குறிப்பிடும்போது வேற்றுசமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பலநாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமைஇவர்களைத்தான் சாரும் என்று கூறினார்கள்அவர்களுக்கும் எனது நன்றிபிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல்ஆகியவற்றை எதிப்பு இன்றிஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்கு புகட்டிய மதத்தைச்சார்ந்தவன் நான் என்பதில் மிகவும் பெருமை அடைகின்றேன்எதையும் வெறுக்காமல் மதிக்கவேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கின்றோம். 

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப்பட்டவர்களுக்கும்நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகின்றேன். ரோம்மணிரின் கொடுமையால்தங்கள் திருக்கோயில் சிதைந்துசீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்த கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனதாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகின்றேன். மேலும் பெருமை மிக்க சொராஸ்திரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கின்றேன். 
 
என் அருமை சகோதர்களே!!!  பிள்ளை பருவத்திலிருந்து நான் பாடிப் பயின்றுவருவதும்கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும்இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டுவருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு உங்கள் முன் குறிப்பிடவிரும்புகின்றேன்.

"எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் தன்மையினைப் போன்றுலகோர் 
பின்பற்று தன்மை யாலே
சங்கமிகு நெறி பலவாய் நேராம்
வளைவாம் தோன்றினாலும் 
அங்கு அவைதாம் எம்பெரும!! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறேயன்றோ!!!
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிகமிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தபேரவைகீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அறுபுதமான உண்மையைஉலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.  யார் எந்த வழியாக என்னிடம் வரமுயன்றாலும் நான் அவர்களை அடைகின்றேன்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கின்றார்கள்.அவையெல்லாம்இறுதியில் என்னையே அடைகின்றன.
பிரிவினைவாதம்அளவுக்கு மீறிய மதப்பற்றுஇவற்றால் உண்டான மதவெறிஇவைஇந்த பூமியினை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும்மீண்டும்மூழ்கடித்து நாகரீகத்தை அழித்து எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்த கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிட பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும். அவற்றிற்கான அழிவு காலம் வந்துவிட்டது. இந்த பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கியமணியோசை மதவேரிகளுக்கும்வாளாலும்பேனாவாலும் நடைபெறுகின்றகொடுமைகளுக்கும்ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் அடிக்கும்சாவு மணி ஒசையாகும் என்று நான் திடமாக நம்புகின்றேன். 

இனி வரும் பகுதிகளில் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவின் குறும்படமும், தமிழாக்க விளக்கமும் காண்போம்....மேலும் பயணிப்போம் ...அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment