Search This Blog

Saturday, June 11, 2011

காலத்தை இழந்தபடி!

என்
நினைவுகளை
கடிகாரத்தின் முட்களுடன்
சுழற்றிவிடுகின்றேன்....
காலத்தை இழந்தபடி!
Join Only-for-tamil
வேண்டாம் இந்த காதல்
என்று வீராப்பாய்
இருந்திருந்த வேளையில்
இதயத்தில் படர்ந்த
உனது பார்வை கொஞ்சம்
என்னை அசையத்தான் செய்தது......

மடித்துப் போட்ட காகிதமாய்
மடங்கிக் கிடக்கின்றேன்.... - உன்
விரலின்  ஸ்பரிசத்தில்
பிரித்துப் படிக்க மாட்டாயா என்று
மனம் மௌனமாய் மருகுகிறது!
Join Only-for-tamil
சிந்தனைக்குள் சிக்கெடுத்தே
என் மூளை நரம்புகள்
முடங்க ஆரம்பித்துவிட்டது...
கனவுக் காட்சிக்குள்
சுற்றி வந்தே சுயநினைவு
சுரமிழக்க ஆரம்பித்துவிட்டது...

என் இதய பூமியின்
உரிமை வானம் உனக்குமட்டும்
பட்டயம் போட காத்திருக்கிறது
சுவாசமான காதலைச் சுமந்தபடி.....
Join Only-for-tamil
என் காதலின் ஆத்மகீதம்
தென்றலின் இசையாய் மட்டுமல்ல
புயலின் ஓசையாவும்
உன்னை வந்தே வரம் வாங்கும்!

என் காதல்
காற்றின் திசைக்கு ஏற்ப
நகரும் மேகமல்ல...
எந்த வஞ்சனையும்
அறியாத
மழலையின் மனம் போன்றது...
Join Only-for-tamil
காற்றிற்கு கூட பலவீனம்
பாவமாய் வரலாம்...
ஆனால்
என் காதலுக்கு பலவீனம்
பாந்தமாய் கூட வராது....

இதயத்தில் மறைத்து வைத்த
காதலை இமைக்குள் வைக்கின்றேன்
கண்ணீரைக் கொடுக்காமல் - உன்
காதலைத் தருவாய் என்ற நம்பிக்கையில்
நாளெல்லாம் உனை வலம் வருவேன்...
Join Only-for-tamil

No comments:

Post a Comment