Search This Blog

Friday, June 24, 2011

விரும்பியதை அளிக்கும் மகத்தான ஹோமங்கள்


விரும்பியதை அளிக்கும் மகத்தான ஹோமங்கள்


நம் இந்து சாஸ்திரப்படி , இறைவனுக்கு எதையேனும் நீங்கள் அளிக்க விரும்பினால், அதை அக்னி மூலம் தான் அளிக்க முடியும். 
அர்ப்பணிப்பு  உணர்வுடன் மிக சிரத்தையுடன் நீங்கள் மேற்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQiAz2jld_18GjAlh6AL7KWGlCkzSY4pXiEiPkiJU5jjjWjFK6mwWc-9ECY
நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அளிக்கப்படும்  அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.

அக்னிக்கு அளிக்கப்படும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். 
அது உரிய முறையில் காலத்தே நம்மை வந்து பிரதி பலன்களை அளிக்கும். 
நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம்.

சில முக்கியமான ஹோமங்களை கீழே காண்போம். :

மகா கணபதி ஹோமம்  : தடையின்றி செயல்கள் நடைபெவும், லெட்சுமி கடாட்சம்  பெறவும்.

சந்தான கணபதி ஹோமம்  : நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

வித்யா கணபதி ஹோமம்  : கல்விக்காக

மோகன கணபதி ஹோமம்  : திருமணத்திற்காக

ஸ்வர்ண கணபதி ஹோமம்  : வியாபார லாபத்திற்காக

நவகிரக ஹோமம்  : நவகிரகங்களினால் நன்மை ஏற்பட

லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம். : ஏழையும் செல்வந்தனாவான்

துர்க்கா ஹோமம்  : எதிரிகளின் தொல்லை அகல,

சுதர்சன ஹோமம் : கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் ஏவல்கள்  அகல

ஆயுஷ் ஹோமம் : ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

மிருத்யுன்ஜெய  ஹோமம்  : ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

தன்வந்திரி ஹோமம் : நோய் நிவாரணம்

ஸ்வயம்வரா ஹோமம்   : திருமணதடை அகல, விரைவில் கைகூட

சந்தான கோபால கிருஷ்ணஹோமம். : குழந்தைப் பேறு கிடைக்க
மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம் : மேற்கல்வி. தெளிந்த  சிந்தனை, 

பார்வதி கலா ஹோமம்  

ஜாதகரீதியாக நாகதோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். அப்படி அமைந்த ஜாதகர்களுக்கு ஆண்கள் என்றால் 30 வயதுக்கு மேலும், பெண்கள் என்றால் 27 வயதிற்கு மேலும் திருமணம் செய்ய வேண்டும். முன்னதாகத் திருமணம் நடந்தால் மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டுவிடும். அப்படிப் பட்ட ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வர கலா ஹோமமும் செய்து, கலச அபிஷேகம் செய்து கொண்டால் மேற்கண்ட தோஷங்கள் யாவும் விலகிவிடும். காரைக்குடி செஞ்சை நாகநாத சுவாமி கோவிலிலும், பள்ளத்தூர் அருள்நந்தி ஆசிரமத்திலும் மேற்கண்ட ஹோமங்களை முறையாகச் செய்வார்கள்


Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_4012.html#ixzz1QCwRH83t

No comments:

Post a Comment