amudu
A WAY OF LIVING
Search This Blog
Tuesday, June 14, 2011
தடுமாறி நுழைகின்றேன்..
யாருமற்ற அந்தி நேரம்
எப்போதும் நினைவுகளை
அள்ளித்தரும்...
தொலைதூரத்தில்
நான் தனிமையில் கிடந்தாலும்
தொலைபேசியில் கசியும்
உன் குரலின் ஓசையில்
வெளியேறும் உன் நேசங்கள்
என் மனம் மடை திறந்த
அணையாய் பிரமிக்கும்......
ஏங்கித் தவிக்கும் இந்த
தவிப்புகளையெல்லாம்
அடர்ந்திருக்கும் இந்த இருளின்
தனிமையில் என்னைச் சுற்றிவரும்
இந்த மின்மினிப்பூச்சிகளிடம்
சொல்லி அனுப்புகின்றேன்....
உன் நினைவுகள்
உயிர் நடுங்கும் குளிராய்
என்னோடு இணைந்திருக்க
நீ இல்லாத பொழுதாக
எதுவுமே ஏற்படவில்லை!
நிலவின் ஒளியில் விழும்
நிழல் பூமியோடு
ஒட்டிக்கொள்வதுபோல்
என் இதயத்தில் ஒளிரும்
உன் உருவமும்
என் நிழலோடு
இணைந்து நடக்கும்!!
எப்படியோ எங்கிருந்தபடியோ
தடுமாறி தடுக்கி வீழ்ந்தாலும்
பற்றிக் கொண்டு எழுவதோ
உன் நினைவுக் குச்சிகளுடன் தான் ......
நீ சென்று வந்த திசையெங்கும்
சூழ்ந்திருக்கும் என் புலம்பலின்
வாசம் கருகலாய்.....
காற்றில் மிதக்கும்
என் வார்த்தைகள் களைப்படைவதற்குள்
துளிர்க்கக் காத்திருக்கும்
என் நம்பிக்கைகளை
அள்ளி அணைத்துக் கொள்...
நினைவுகளின் சங்கமத்தில்
மீண்டும் மூழ்கிவிட
மறுபடியும் - உன்
நினைவுகளுடனேயே
தடுமாறி நுழைகின்றேன்...
Related Posts :
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment