Search This Blog

Wednesday, June 22, 2011

காத்திருத்தல் தொடரும்


 
Join Only-for-tamil

விடியாத காலை 
பனிசிந்தும் வேளை.. காத்திருந்தேன் ரயில் நிலையத்தில்  - என் பயண ரயிலின் பச்சைகொடிக்காக .. 
மெல்லிய ஆடை கொண்டு - தன் மல்லிகை முகத்தை மூடி .. கனவு தேவதை வந்தாள் கனவு உனக்கு தேவையா என்பதுபோல் - அவளது அழகால் 
என் கண்ணோரம் இருந்த தூக்கம் மண்ணோரம் மறைந்து கொள்ள - அந்த பெண்ணோரம் பார்வை திரும்பியது என்னோரம் திரும்புமா என்று ? - அவளது அழகால் 
எனக்குள் இருந்த ஏக்கம்  - தன் ஜன்னல் கதவை மூடி வாசற்கதவை திறந்தது .. 
அங்கே ஒலித்தது ரயிலின் மணியோசை எனது பயணத்தின் துவக்கத்திற்கும் அவளது சந்திப்பின் முடிவுக்குமாய் ..! 
                                        ... காத்திருத்தல் தொடரும் 

No comments:

Post a Comment