Search This Blog

Tuesday, June 7, 2011

தொகுத்தவை

எதைத்தேடி நம் பயணம்: 
சத்தியம் நமக்குள் இராவிடில்
அன்பென்ற பறவை நமக்குள்ளேது...?
சத்தியம் காப்பவரிடத்தில் பண்பு உள்ளது
பண்பு உள்ளவரிடத்தில் அன்பும் உள்ளது
அந்த அன்பு சிறந்தது....!!!
சகோதரனே .............
சகோதரியே .............
காலை உணவருந்தி
பகட்டாக உடையணிந்து
எதைத்தேடி நம் பயணம்..........?

நிர்ப்பந்தம்:
இழப்புகள் சந்திக்கப்படவேண்டிய நிர்பந்தம்
வாழ்வில் தோற்பது மட்டும்
நமக்கு எட்டாக் கனி...!
தரையே இல்லாவிடினும்
தவழும் ஒரு புதிய அத்தியாயம்
காணும் ஒரு சூத்திரம்
கண்டபின் வரும் ஆனந்தம்
காலை விரும்பா இருட்டுகள்
இரவுகள் அறியும் வெளிச்சங்கள்
விடியல் தேடிய படையல்கள்
படையல்கள்தான் நமது விடியல்கள்
விடியல்களின் வெளிச்சத்தில்
விளக்கேற்றத் தேவையில்லை
விளக்கமே நாமாயிருக்கும் பட்சத்தில்
அகல் விளக்குகளுக்கு இங்கு
வேலையுமில்லை.........!!

வாழ்க்கையின் பயணம்:
வாழ்ந்து தான் பார்ப்போமே
இது யதார்த்தம்........!
வாழ்ந்தே ஆகவேண்டும்
இது கட்டாயம்....!
வாழ்ந்தால் என்ன
ஆச்சரியம்......!!!
வலிகளைத் தாங்கி
வாழும் முயற்சியின்
தொடர்ச்சிகள் நம்
வாழ்க்கையின் பயணம் ...!!

சுமை:
புத்தகச் சுமை பிள்ளைகளுக்கு
பள்ளி கட்டண சுமையோ
பெற்றோர்களுக்கு !

நட்புடன்
பொறிஞர் வி.நடராஜன்

No comments:

Post a Comment