Search This Blog

Saturday, May 28, 2011

Tsotsi

Tsotsi


 
எதற்கும் கவலைப்படாத ஒரு சேரிப்புற ரவுடியின் வாழ்வில் எதிர்பாராமல் ஒரு குழந்தை இணைந்து கொள்ள, என்னவாகிறது? - இதுதான் படத்தின் தீம்.

சிறுவயதில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, இரக்கமற்ற தந்தையிடமிருந்து ஓடிவந்து சேரிப்புறத்தில் தஞ்சமடைந்து, வளர்ந்த சொற்சி, நண்பர்களோடு சேர்ந்து வழிப்பறி, கொள்ளை, கொலை என வாழ்ந்து வருகிறான்.



       ஒருநாள் பென்ஸ் காரொன்றை திருடும்போது, உள்ளே ஒரு குழந்தை, தாயை சுட்டு விடுகிறான். குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல், அனாதையாக விட்டுச் செல்லவும் மனமில்லாமல், இறுதியில் தனது வீட்டுக்குக் கொண்டு செல்கிறான். ஒருவருக்கும் தெரியாமல் தானே வளர்க்க முடிவு செய்கிறான். வீட்டுக்கு வரும் நண்பர்களை உள்ளே நுழைய விடாமல், சந்தேகப் படும் அவர்களை ஒருவாறு சமாளித்து அனுப்புகிறான்.

        கைக் குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று, அவளை மிரட்டி பாலூட்ட வைக்கிறான். முதலில் வற்புறுத்தலால் சம்மதிக்கும் அவள், நாளாக அக்குழந்தையின் மேல் பாசம் கொள்கிறாள்.


         ஒரு நாள் நண்பர்களுடன் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க செல்லும்போது, அது அந்தக் குழந்தையின் வீடு எனத் தெரிய வருகிறது. குழந்தையின் தந்தையிடமிருந்து அதன் தாய் அவன் சுட்டதால், இடுப்புக்கு கீழ் வழங்காமல் இருப்பதையும், குழந்தையைப் பிரிந்து இருவரும் மிகவும் வருந்துவதையும் உணர்கிறான். பணம், நகையை விட்டு குழந்தையின் விளையாட்டு பொம்மைகள், உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான்.

ஒரு சிறு குழப்பத்தில் குழந்தையின் தந்தையை சொற்சியின் சகா கொல்லப் போக, அவனைக் கொன்று தந்தையைக் காப்பாற்றுகிறான். இன்னொரு சகா வெறுத்துப் போய் அவனிப்பிரிந்து செல்கிறான்.

      இப்பொழுது அவனுடன் குழந்தை மட்டுமே. அதான் ஆடம்பரமான பெரிய வீட்டைப் பார்த்த அவனுக்கு தனது குடிசையில், பாதுகாப்பின்றி வைத்திருப்பது அவன் மனதுக்கு கஷ்டமாக இருக்க, போலீஸ் வேறு அவனைத் தேட, முதன்முறையாக தான் வாழ்க்கையில் நேசித்த, அன்பு கொண்ட ஒரேயொரு ஜீவனைப் பிரிந்து விட முடிவு செய்கிறான்.


குழந்தையை அதன் வீட்டில் கொண்டுபோய் விட தூக்கி செல்லும்போது, அந்தப் பெண் எங்கே எடுத்துச் செல்கிறாய்? அவனை நான் வளர்க்கிறேன் என்னிடம் விட்டுவிடு எனக் கேட்க, அவன் எதுவுப் பேசாமல் போகிறான்.

      துப்பாகிகளால் குறிவைத்தபடி போலீசார் சுற்றிநிற்க, குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அழுதபடி, சொற்சி கைகளை மேலே மெதுவாக தூக்க படம் நிறைவடைகிறது.

மிகத் தெளிவான, எளிமையான, குழப்பமற்ற திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு (குறிப்பாக அந்த 'ஸ்லம்' காட்டப்படும் விதம்)

சொற்சி பாத்திரத்தின் இயல்பான நடிப்பு, குழந்தைக்குப் பாலூட்டுவதை பார்க்கும்போது வெளிப்படும் (தாய்ப் பாசத்துக்கு ஏங்கும்) முகபாவனை

இயக்கம் - Gavin Hood
Country- South Africa
Award - Academy Award for Best Foreign Language Film 2005
           - Nominated for Golden Globe for Best Foreign Language Film 2006

No comments:

Post a Comment