Search This Blog

Sunday, May 15, 2011

I .T. துறையில் ஜொலிக்க நினைப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

I .T. துறையில் ஜொலிக்க நினைப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு


 
இன்று பெரும்பாலும் ராகுதிசா நடப்பவர்களே ஐ.டி.பணிகளில் உள்ளனர்.ராகு என்பது யோகக்காரன் என்று கொள்ளப்படுகிறான்.ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் உருவாகுவதும்,சொத்துக்கள் இழப்பதும் ராகுவின் விளையாட்டு.
 
நீங்கள்  வேலை பார்க்கும் நிறுவனம், கம்பியூட்டர், I . T . துறை, LIC , மக்கள் தொடர்பு அதிகமாக இருக்கும் வேலை என்றால், நீங்கள் அம்மன் வழிபாடு செய்து வந்தால் , உங்கள் துறையில் நீங்கள் வெற்றி பெறுவதோடு, மக்களின் நன் மதிப்பு  பெற முடியும்.
 
சில பெண்களைப் பார்த்தாலே , அவர்கள் ராகுவின் அம்சங்கள் நிறைந்த பெண்கள் என்று தெரிய வரும். நமக்குத் தெரிந்த முகம் என்றால், பருத்தி வீரன் படத்தில் வரும் , முத்தழகு காரேக்டரைப்  போல  என்று எடுத்துக் கொள்ளுங்கள். இவர்கள் கணினி வேலைகளில் படு வேகமாக செயல்படுவார்கள். 

மனித உடல் உறுப்புக்களில் பிறப்பு உறுப்பின் செயல்பாட்டினே நிர்ணயிப்பது, அதிரடி மாற்றம் ஏற்படுத்துவதும், குற்றங்கள் செய்யத் தூண்டுவதும்,அந்த குற்றங்கள் எப்படி நடந்தது என்பதை கண்டு பிடிப்பதற்கு புலனாய்வு செய்யும் திறமையினைத் தருவதும், முறையற்ற உறவுகள், குழு உறவுகள், குறுகிய காலத்திற்குள் பல லட்சம் பேரினை பாதிக்கச் செய்தல் (அதாவது ஒரு வதந்தியை மின் அஞ்சல் மூலமாக சில நிமிடங்களில் பல லட்சம் பேரைச் சென்றடையச் செய்வது)-  இவை எல்லாம் ராகுவின் குணநலன்கள். இவர்கள் மற்றவர்களிடத்தில் ரொம்பத் திமிராகத்தான் நடந்து கொள்வார்கள். திறமையும் அதிகம் இருக்கும். ஆனால் என்ன? அதை நல்ல முறையில் பயன் படுத்தினால், பலருக்கு உபயோகமாக இருக்கும்.
http://www.extramirchi.com/wp-content/uploads/2008/01/priyamani_010.jpg
 
இதற்கு ஒரு சுலப வழி உண்டு. அது என்னவென்றால், தினமும் ,உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு அம்மன் கோவில் (உதாரணமாக பத்திரகாளி அம்மன் அல்லது உக்கிர பெண் தெய்வம்) தினமும் ஒரு வேளை சென்று வழிபட்டு வர வேண்டும். அதே சமயம் வீட்டிலும்-வெளியிலும் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். (இல்லாவிட்டால் ரத்தகாயம் வழிபடுவோருக்கு ஏற்படும்)

யாருக்கு ராகு திசை நடக்கிறதோ அவர்கள் அல்லது அவர்களது ரத்த உறவுகள் வழிபட்டு வருவதோடு, வெள்ளிக்கிழமை ராகு காலம் காலை 10.30 முதல் 12.00 வரை-அதுவும் 11.30-12.00 கடைசி அரை மணி நேரம் மிக முக்கியம்.அந்த நேரத்தில் எலுமிச்சம்பழத்தில் தாமரை தண்டு திரியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும். 


தவிர, ராகு வின் கிழமை ஞாயிறு ஆகும். அன்று மாலை 5.30-6.00 மணிக்கு மேலே எழுதியது போல தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும். இப்படி ராகு திசா காலம் முழுவதும் 18-ஆண்டுகள் வரை வழிபட்டு வந்தால் குடும்ப  வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.


திருவாதிரை, சுவாதி, சதயம் - இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லேஈரும் மேற்சொன்ன வழிபாடு செய்து வந்தால் 2-3 ஆண்டுகள் கடந்த பிறகு உங்கள்  வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும். இதுவும் அனுபவ உண்மை

Read more: http://www.livingextra.com/2011/02/i-t.html#ixzz1MQnu40fS

No comments:

Post a Comment