Search This Blog

Tuesday, May 3, 2011

இந்தியாவை ஆண்ட முதல் முசுலீம் பெண்.General Knowledge

  • பரிசுச்சீட்டுக் குலுக்கல் முதன் முதலாக சீனாவில்தான் நடைபெற்றது.
  • கராத்தே பயிற்சிக்கான பள்ளி முதன் முதலாக ஜப்பானில் தோன்றியது.
  • டக்டக் என்றால் டேனிஷ் மொழியில் நன்றி என்று அர்த்தம்.
  • உலகில் அதிகமானவர்களை வாட்டும் நோய் பல்வலி.
  • புத்தமதக் கொள்கைகளைப் போதிக்கப் பயன்படுத்தப்பட்ட மொழி பாலி.
  • திருக்குறளில் 14,000 வார்த்தைகள் இருக்கின்றன.
  • சானாமோரினோ நாடு இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு.
  • முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு பெரு.
  • பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.
  • பைபிள் முதன் முதலில் ஹூப்ரு மொழியில்தான் எழுதப்பட்டது.
  • இந்தியாவை முதலில் ஆண்ட முசுலீம் பெண் ரசியா பேகம் (1236-1240)
  • ஒரு மின்னலின் சராசரி நீளம் 6 கிலோமீட்டர்.
  • உலகில் பெண் வீராங்காணைகளைக் கொண்டு படை உருவாக்கிய நாடு நியூசிலாந்து.
  • ஸ்நூக்கர் எனும் விளையாட்டில் 22 பந்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு யானைக்கும் தினசரி 200 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்காகத் தேவைப்படுகிறது.
  • பூமியில் கடல்பகுதி 74.34 சதவிகிதமும், தரைப்பகுதி 25.63 சதவிகிதமும் உள்ளது.
  • பாம்பு முட்டைகள் இடப்பட்ட பின்னர் பெரிதாகும் தன்மையுடையது.
  • மெசபடோமியர்கள்தான் கண்ணாடிப் பாத்திரங்களை முதலில் செய்தவர்கள்.
  • உலகின் மிகப்பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடாதான். இதன் பரப்பு 580,000 சதுர மைல்கள்
  • பால்கன் எனும் பறவை மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய பறவையாகும்.
  • ஆஸ்ட்ரிச் எனும் பறவை ஒரே கூட்டில் 100 க்கும் அதிகமான முட்டைகளை இடும்.
  • உலகின் மிகப் பழமையான தேசியக் கொடி டென்மார்க் நாட்டின் தேசியக் கொடிதான்.
  • சிங்கப்பூரை சர் தாமஸ் ஸ்டான்ஃபோர்ட் ராஃப்ட்லஸ் என்பவர் 1819ல் நிறுவினார்.
  • புலி தாக்கப் பயப்படும் விலங்கு காட்டெருமை.
  • கழுத்தைத் திருப்பாமல் கண்ணை மட்டும் அசைக்கும் விலங்கு ஒட்டகச்சிவிங்கி.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

No comments:

Post a Comment