Search This Blog

Tuesday, May 3, 2011

ஜப்பானியப் பழமொழிகள்

ஜப்பானியப் பழமொழிகள்
  • என்னதான் கீழே விழுந்தாலும் நல்ல மனிதர்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
  • மூன்று செயல்கள் மகிழ்வான வாழ்வுக்குரியது அவை சென்றதை மறப்பது, நிகழ் காலத்தை நேர் வழியில் செலுத்துவது, வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது.
  • மனிதன் பணத்தைக் கூட்டுகிறான், கடவுள் மனிதனின் ஆயுளைக் குறைக்கிறான்.
  • நோய் வந்தபோது ஒருவன் - தன் உயிரைப்பற்றி நினைக்கிறான். சுகமான போது பணத்தை பற்றி நினைக்கிறான்.
  • தன்னுடைய அறியாமையை ஒத்துக் கொள்கிறவன் அதை ஒரு முறை காட்டுகிறான். அறியாமையை மறைக்கிறவன் அதை பலமுறை காட்டுகிறான்.
  • கல்யாணமான பின்பு சம்பாதிக்க ஆரம்பிப்பவன் இறந்த பிறகுதான் பணக்காரனாவான்.
  • புகழ் என்பது நீர் மட்டம் போன்றது அது ஒரு கட்டத்தில் பெரிதாகி பின் மறைந்து விடுகிறது.
  • அடக்கி வைத்திருப்பதை விட திறந்து விடுவது மேலானது.
  • சத்தியம், நிதர்சனம், சகிப்புத்தன்மை மூன்றும்தான் அறிவை வளர்க்கின்றன.
  • குழந்தை தன்னைத் தூக்கி வைத்திருப்பவரை அறியும் தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துபவரை அறியாது.
  • செல்வம் இருப்பதைவிட ஒரு தொழில் இருப்பது மேலானது.
  • மாமியாருக்கு மரியாதை காட்டினால், தினமும் மூன்று முறை வந்து சலிப்படைய செய்வாள்.
  • உன்னை ஒருவன் ஒரு தடவை ஏமாற்றினால் அது அவனுக்கு அவமானம், இரண்டாவது தடவை ஏமாற்றினால் அது உனக்கு அவமானம்.
  • இளமையில் பட்ட அடிகள் முதுமையில்தான் உணரப்படுகின்றன.
  • பறவைக்கு பயந்து விதைக்காமல் இருக்காதே.
  • அறிஞர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள், முட்டாள்கள் அதைப் பெற்று விட்டதாக நினைக்கிறார்கள்.
  • அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பது மரணத்திற்காகக் காத்திருப்பதுதான்.
  • ஒழுகும் கூரை, புகையடையும் கூண்டு, ஓயாமல் சண்டையிடும் மனைவி இவை மூன்றும் ஒருவனை வீட்டை விட்டுக் கிளப்பிவிடும்.
  • உச்சியில் இருந்து கீழே விழுந்தவனை ஒவ்வொருவனும் தள்ளி விடுவான்.
  • ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறக்கிறது.
    தொகுப்பு: தாமரைச்செல்வி.

No comments:

Post a Comment