Search This Blog

Tuesday, May 3, 2011

கண்பார்வை இல்லாத கவிஞர்

கண்பார்வை இல்லாத கவிஞர்
  • இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அரசமரத்தின் இலை சமாதானத்தின் சின்னமாகப் போற்றப்படுகிறது.
  • உலகில் அதிக நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ள நாடு ஆஸ்திரேலியாதான். இங்கு 27, 948 கிலோ மீட்டர் நீளம் கடற்கரையுள்ளது.
  • திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம், லட்டு கிடையாது.
  • சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைய 6,30,04,000 மைல்கள் பயணிக்கின்றன.
  • ஆங்கிலக் கவிஞர் மில்டன் கண் பார்வையற்றவர்.
  • உலகில் அதிக அளவில் முட்டையிடும் உயிரினம் கரையான்.
  • பாகிஸ்தான் முதல் இசுலாமியக் குடியரசு நாடு.
  • வாத்து அதிகாலையில்தான் முட்டையிடும்.
  • சைமன் பொலிவியர் என்பவர் 1928 ஆம் ஆண்டில் பொலிவியா, பெரு மற்றும் கொலம்பியா என மூன்று நாடுகளுக்கு குடியரசுத் தலைவராக இருந்தார்.
  • உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 இருக்கின்றன.
  • ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்நாளில் சராசரியாக 60, 000 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்குத் தேவையாக இருக்கிறது.
  • இந்தியாவில் முதலில் தமிழில் தான் “பைபிள்”  மொழிபெயர்க்கப்பட்டது.
  • உலகில் 2792 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
  • சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்தவர் தியாகி சங்கரலிங்கம்.
  • ஆப்கானிஸ்தானில் ரயில் போக்குவரத்து இல்லை.
  • தபால்தலையில் நாட்டின் பெயரை வெளியிடாத நாடு இங்கிலாந்து.
  • இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு உலகின் 17 பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டத்தை அளித்துள்ளன.
  • நத்தையில் ஆண், பெண் பிரிவுகள் கிடையாது. இதற்குக் கொம்பில்தான் கண்கள் இருக்கின்றன.
  • பீர்பால், தான்சேன், தோடர்பால், மான்சிங், ஃபைஜி, அப்துல்ஃபாசல், ரஹீம்கானி-கானன், பகவான்தாஸ், மிர்சா அஜிஸ்கோகோ ஆகிய ஒன்பது பேர் அக்பர் அவையின் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  • திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனைச் சாப்பிடமாட்டார்கள்.
  • பிரேசில் நாட்டில் கிடைக்கும் தேன் கசக்கும்.
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இல்லாததால் அவரை அவருடைய பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராகவேக் கருதினார்கள்.
  • உலகிலேயே அதிகமான மசூதிகள் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில்தான்  இருக்கின்றன. இங்கு மொத்தம் 444 மசூதிகள் இருக்கின்றன.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

No comments:

Post a Comment