Search This Blog

Thursday, May 5, 2011

மருத்துவ நகைச்சுவைகள்

மருத்துவ நகைச்சுவைகள்
                                                                                               - தேனி.எஸ்.மாரியப்பன்.
திருப்தியாக சாகலாம்!
நோயாளியிடம் டாக்டர், "உங்கள் நோயை முழுமையாகக் குணப்படுத்தி விட்டேன்" என்றார்.
"இனி ஆபத்து இல்லையா டாக்டர், நான் பிழைத்துக் கொள்வேனா?" என்றார் நோயாளி.
"நிச்சயமாகச் சொல்ல முடியாது. சாவதற்கு முன்பு நோய் குணமாகி விட்டது. செத்தாலும் திருப்தியாகச் சாகலாம். அவ்வளவுதான்" என்றார் டாக்டர்.
மாத்திரை உங்களுக்குத்தான்
ஒரு பெண் தன் கணவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாள். ஒரு வாரம் தங்கி தன் கணவனைக் கவனித்து வந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்தது. டாக்டர் அந்தப் பெண்ணை அழைத்து இப்படிச் சொன்னார்.
"உங்கள் கணவருக்கு மிகவும் ஓய்வு தேவை. இந்த தூக்க மாத்திரையைப் பயன்படுத்துங்கள்." என்றார்.
அவள், "மாத்திரையை எப்போது கொடுக்க வேண்டும்?" என்று டாக்டரைக் கேட்டாள்.
அதற்கு டாக்டர், "இந்தத் தூக்க மாத்திரை அவருக்கில்லை, உங்களுக்குத்தான். உங்கள் கணவர் நல்ல ஓய்வு எடுக்கவும் விரைவில் குணமாகவும் இதுதான் ஒரே வழி" என்றார்.
டாக்டருக்குத் தெரியாதா?
ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள். சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, "இறந்து விட்டான்" என்று சொன்னார்.
அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, "டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.
அருகிலிருந்த அவனுடைய மனைவி, "பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது" என்றாள்.
விசிட்டிங் பீஸ் எவ்வளவு?
ஒருவன் நடுராத்திரியில் சென்று டாக்டர் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். 
டாக்டர் எழுந்து "என்ன வேண்டும்?" என்று கேட்கிறார்.
வந்தவனோ ஒரு முகவரியைக் காட்டி, "இந்த இடத்திற்கு வர வேண்டும் மிகவும் அவசரம்" என்கிறான்.
டாக்டரும் காரை எடுத்துக் கொண்டு அந்த ஆளுடன் குறிப்பிட்ட ஊருக்குச் செல்கிறார்.
ஊர் வந்ததும் டாக்டரை அழைத்து வந்தவன் காரிலிருந்து இறங்கினான். டாக்டரைப் பார்த்து, "உங்களது விசிட்டிங் பீஸ் எவ்வளவு?" என்றான்.
டாக்டர்,"ஐம்பது ரூபாய்" என்றார்.
உடனே அவன் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு, "மிகவும் நன்றி டாக்டர். அங்கேயிருந்து இங்கே வர டாக்ஸிக்காரன் நூறு ரூபாய் கேட்டான்" என்றான்..

No comments:

Post a Comment