Search This Blog

Wednesday, May 4, 2011

துன்பத்திலிருந்து விடுபட முடியாதது ஏன்?

துன்பத்திலிருந்து விடுபட முடியாதது ஏன்?
பசி தாங்க முடியாத இரண்டு எலிகள் தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தன.
அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அந்தப் பானை உயரமானதாக இருந்ததால் பாலைக் குடிக்க முடியாமல் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது என்றும், அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது:

"போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு  மேலே இருந்த எலி மிரண்டு போய் பால் பானைக்குள் விழுந்து விட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் இந்தப் பானையிலிருக்கும் பால் அனைத்தும்" என்று நினைத்தது.

பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.
பால் பானைக்குள் விழுந்த எலி மேலே ஏறி வர முடியாமல் உயிரை விட்டது.
இப்படித்தான் துன்பத்திலிருந்து விடுபட ஒருவருக்குப் பிறரின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. ஆனால் அது சரியாக இல்லா விட்டால் இருவருக்குமே ஆபத்தாகி விடுகிறது.

No comments:

Post a Comment